பதிவு செய்த நாள்
03 மே2012
00:03
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்று மந்தமாக இருந்தது. கடந்த மூன்று வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்குச் சந்தை, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால் சரிவைக் கண்டது. சென்ற ஏப்ரல் மாதத்தில், அமெரிக்கா மற்றும் சீனாவின் தொழில்துறை உற்பத்தி எதிர்பார்த்ததை விட சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது என்ற செய்தியால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், மின்சாரம், பொறியியல், எண்ணெய் எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 16.90 புள்ளிகள் சரிவடைந்து, 17,301.91 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,432.33 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,265.48 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 9 புள்ளிகள் குறைந்து, 5,239.15 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,279.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,226.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|