சர்க்கரை உற்பத்தி 2.51 கோடி டன்னை எட்டியது சர்க்கரை உற்பத்தி 2.51 கோடி டன்னை எட்டியது ... பட்டுப்புழு வளர்ப்பு குடிலுக்கான மானிய தொகை அதிகரிப்பு பட்டுப்புழு வளர்ப்பு குடிலுக்கான மானிய தொகை அதிகரிப்பு ...
அரசு கல்லூரிகளின் உள் கட்டமைப்புக்கு ரூ.100 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2012
10:03

சென்னை : அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில், 100 கோடி ரூபாய் செலவில், உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில், விதி 110ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் செயல்பட்டு வரும், 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்; ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகள்; 24 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என, மொத்தம், 93 கல்லூரிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. 100 கோடி ரூபாய் செலவில், இந்த வசதிகள் மேம்படுத்தப் படும். இந்நிதியில் இருந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவைப்படும், மேஜை, நாற்காலிகள் வாங்குதல்; நவீன கரும்பலகைகள் மற்றும் அறிவிப்புப் பலகைகள் அமைத்தல்; மொழி ஆய்வகங்களுக்கு கணினி மேஜைகள், நாற்காலிகள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், மாணவர்கள், தங்கள் பாடங்கள் சம்பந்தமாக மேற்கொள்ளும் பரிசோதனைகளுக்காக, தரம் வாய்ந்த ஆய்வுக் கூடங்கள் ஏற்படுத்தப் படும்.
குடிநீர், கழிப்பறை வசதி : உணவறை கூடங்களை மேம்படுத்துதல், தரமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளை மேம்படுத்துதல் இதில் அடங்கும். அரசு கல்லூரிகளில், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, இதுவரை இல்லாத அளவாக, 100 கோடி ரூபாய் வழங்கப் படுகிறது. இதன்மூலம், அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அனைத்து வசதிகளையும் பெற வழிவகை செய்துள்ளதுடன், இக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்பட்டு, அவர்கள், அகில இந்திய அளவில் முன்னிலை இடத்தைப் பெறவும் வாய்ப்புகள் ஏற்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)