அரசு கல்லூரிகளின் உள் கட்டமைப்புக்கு ரூ.100 கோடிஅரசு கல்லூரிகளின் உள் கட்டமைப்புக்கு ரூ.100 கோடி ... மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை ...
பட்டுப்புழு வளர்ப்பு குடிலுக்கான மானிய தொகை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2012
11:04

சென்னை: "பட்டுப்புழு வளர்ப்புக் குடில் கட்டுவதற்கான மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படும்' என, ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத், சட்டசபையில் அறிவித்தார்.
இத்துறை மீதான மானியத்தில், அமைச்சர் அறிவித்த புதிய அறிவிப்புகள்:
* பட்டுப்புழு வளர்ப்பு, புழு வளர்ப்புக் குடில் மற்றும் தனி நபர் விபத்து காப்பீட்டிற்கான தவணைத் தொகையில், 25 சதவீதத்தை தற்போது பயனாளிகள் செலுத்தி வருகின்றனர். அவர்களின் பங்களிப்பு, 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகவும், மாநில அரசின் பங்களிப்பு, 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக மாற்றப்படும்.
* சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், சிறிய அளவிலான இளம்புழு வளர்ப்பு மையங்கள் அமைத்து, மானிய விலையில் தளவாடங்கள் தரப்படும். இதற்காக, நடப்பு நிதியாண்டில் 50 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
* விவசாய தோட்டங்களின் வரப்பு ஓரங்களில், மூன்று லட்சம் மல்பரி மரக் கன்றுகள் நடவு செய்ய, நடப்பு நிதியாண்டில், 26.25 லட்ச ரூபாய் மானியம் தரப்படும். இந்த மல்பரி தோட்டங்களுக்கு, மண் பரிசோதனையின்படி, விலையில்லா நுண்ணூட்ட சத்துக்கள் வழங்க, 40 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) மூலம், கைவினைஞர்களுக்கு நேரடி சந்தை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக நடப்பு நிதியாண்டில், 1.65 கோடி ரூபாய் செலவில், 220 கண்காட்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
* பூம்புகார் நிறுவனம் தமது விற்பனை அதிகரிக்க, கைவினைப் பொருட்களை கணினி மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* பட்டு விவசாயிகளுக்கு புழு வளர்ப்புக் குடிலின் அளவிற்கேற்ப வழங்கப்படும் மானியத் தொகை, 75 ஆயிரம் ரூபாயிலிருந்து, ஒரு லட்ச ரூபாய்; 50 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரம் ரூபாய்; 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 37 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு, அமைச்சர் சம்பத் அறிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)