பதிவு செய்த நாள்
03 மே2012
13:49
இந்தியாவில் சொகுசு கார் விற்பனையில், பி.எம்.டபிள்யூ., ஆடி மற்றும் பென்ஸ் நிறுவனங்களே போட்டி போடுகின்றன. ஆனால், இந்த கார்களின் விலை அதிகம். இந்த சூழ்நிலையில், தென் கொரியாவை சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம், சத்தமில்லாமல் ஒரு காரியத்தை செய்துள்ளது. இந்த நிறுவனத்தின், " வெலோஸ்டர்' மாடல் கார், ஏற்கனவே, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் தென் கொரியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரை, டில்லியில் நடந்த வாகன கண்காட்சியிலும் ஹுண்டாய் நிறுவனம் பார்வைக்கு வைத்தது. ஆனால், இந்தியாவில் இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது, இந்த கார், டில்லி ஷோரூமுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அடுத்த மாதம் முதல் இந்த காரின் விற்பனை துவங்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு கதவுகள் மட்டுமே கொண்ட இந்த கார், நகர இளைஞர்களை குறி வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.20 லட்சம் அளவில் இருக்கலாம். சொகுசு கார்களை விற்பனை செய்யும், மற்ற கார் நிறுவனங்களுக்கு, இது கடும் போட்டியை அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார், துவக்கத்தில் வெளிநாட்டில் முழுமையாக உற்பத்தியாகி இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்படும். சில மாதங்களுக்கு பிறகே, சென்னையில் உள்ள ஹுண்டாய் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|