பதிவு செய்த நாள்
04 மே2012
00:52
புதுடில்லி:இந்தியா, அதன் அன்னிய நிதி நிலுவையை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சிக்கலை சந்திக்க நேரும் என சர்வதேச தர ஆய்வு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி எச்சரித்துள்ளது.
ஒரு நாடு, இதர நாடுகளிடம் ஓராண்டில் மேற்கொள்ளும் சரக்கு,சேவை,நிதி உள்ளிட்ட வர்த்தகம் சார்ந்த ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும், ஒரு கரன்சி மதிப்பின் அடிப்படையில் கணக்கிடும் போது உள்ள வேறுபாடு, அன்னிய நிதி நிலுவை (பேலன்ஸ் ஆப் பேமன்ட்ஸ்) எனப்படுகிறது.
இதன்படி, இந்தியாவின் அன்னிய நிதி நிலுவை, அதிர்ச்சி அளிக்கக்கூடிய இடர்பாட்டினை கொண்டதாக உள்ளது. ஆசிய பிராந்தியத்திலேயே, இந்தியா மட்டும் தான் மிகப் பெரிய அளவிலான நடப்பு கணக்கு பற்றாக்குறையை கொண்டுள்ளது.
இந்தியா, அதன் மானியம் உள்ளிட்ட செலவுகளை குறைக்க வேண்டும் அல்லது கச்சா எண்ணெய் விலை குறைய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், சர்வதேச அளவில் ஏற்படும் சின்ன நெருக்கடியும் இந்தியாவிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அன்னிய முதலீட்டிலும், இந்திய ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என மார்கன் ஸ்டான்லி எச்சரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|