பதிவு செய்த நாள்
04 மே2012
00:53
புதுடில்லி:நடப்பு காபி பருவத்தில் (அக்டோபர்- செப்டம்பர்), நாட்டின் காபி உற்பத்தி, 3 லட்சத்து 20 ஆயிரம் டன்னாக அதிகரிக்கும் என, காபி வாரியம் தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், காபி உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு, 4.5 சதவீதம் என்றளவில் உள்ளது. நாட்டில், உற்பத்தியாகும் மொத்த காபியில், 70-80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இத்தாலி, ரஷ்யா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள், இந்திய காபிக்கு முக்கிய சந்தைகளாக உள்ளன.அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான முதல் ஏழு மாத காலத்தில், அளவின் அடிப்படையில், காபி ஏற்றுமதி, 1 லட்சத்து 96 ஆயிரத்து 496 டன்னாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய பருவத்தின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 2 சதவீதம் குறைவாகும்.
இதே காலத்தில், மதிப்பின் அடிப்படையிலான காபி ஏற்றுமதி, 57.30 கோடி டாலர் (2,865 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்து, 59 கோடி டாலராக (2,930 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.நடப்பு காபி பருவத்தில், இதன் உற்பத்தி, 3 லட்சத்து 20 ஆயிரம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த பருவத்தில், 3 லட்சத்து 2 ஆயிரம் டன்னாக இருந்தது என, காபி வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|