மத்திய அரசின் கடன் ரூ.35 லட்சம் கோடிமத்திய அரசின் கடன் ரூ.35 லட்சம் கோடி ... பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி: நூற்பாலைகள் அதிர்ச்சி பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி: நூற்பாலைகள் அதிர்ச்சி ...
விவசாய தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை:உளுந்து, பாசிப்பயறு உற்பத்தி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2012
00:57

கம்பம்:தேனி மாவட்டத்தில், விவசாய தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால், கடந்த மூன்று ஆண்டுகளில், 1 கோடியே 10 லட்சம் கிலோ உளுந்து, பாசிப்பயறு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.முல்லைப் பெரியாறு பாசனத்தில், கூடலூர் முதல் பழனிசெட்டிபட்டி வரை, 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
முதல் போகம், ஜூன் மாதம் துவங்கி, செப்டம்பர் வரை நடைபெறும். இரண்டாம் போகம், அக்டோபரில் துவங்கி ஜனவரி வரை நடக்கும். ஜனவரி மூன்றாவது வாரத்தில், இரண்டாம் போக நெல் அறுவடை முடிந்த பின், நெல் தரிசில் உளுந்து மற்றும் பாசிப்பயறு சாகுபடி செய்வது வழக்கம்.ஜனவரி இறுதியில் சாகுபடியாகும் பயறு வகைகள், ஏப்ரல் மாதம் அறுவடையாகும். அதன் பிறகு, ஜூன் மாதம் முதல் போகத்திற்கான பணிகள் துவங்கும்.
உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு, இருபோக நெல் சாகுபடியில் கிடைக்கும் வருவாயை போன்று, பெரிய அளவில் வருவாய் கிடைத்து வந்தது. பயறு வகை உற்பத்தியும் அதிகரித்தது. கடந்த மூன்றாண்டுகளாக, தேனி மாவட்டத்தில், விவசாயிகள் நெல் தரிசில் உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்வதை கைவிட்டுள்ளனர்.
ஒரு ஏக்கரில் உளுந்து, பாசிப்பயறு மகசூல் சராசரியாக, 250 கிலோ வரை கிடைக்கும். சாகுபடி இல்லாததால் ஆண்டிற்கு, 73 லட்சம் கிலோ உளுந்து மற்றும் பாசிப்பயறு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளில், 1 கோடியே 10 லட்சம் கிலோ உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயத்துறை அதிகாரிகள் கூறுகையில்," முதல் போக அறுவடை முடிந்தவுடன், நிலத்தை ஒரு மாதம் தரிசாக விட்டு வைக்கின்றனர். இதனால், இரண்டாம் போக அறுவடை தாமதமாவதால், உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்ய முடியவில்லை' என்றனர்.ஆனால், தொழிலாளர் பற்றாக்குறை, கூலி உயர்வு, கோடை மழை இல்லாததும் தான் உளுந்து, பாசிப்பயறு சாகுபடியை கைவிடக் காரணம், என விவசாயிகள் கூறுகின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)