விவசாய தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை:உளுந்து, பாசிப்பயறு உற்பத்தி பாதிப்புவிவசாய தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை:உளுந்து, பாசிப்பயறு உற்பத்தி ... ... மொபைல் போன் சந்தாதாரர்கள் 95 கோடியாக உயர்வு மொபைல் போன் சந்தாதாரர்கள் 95 கோடியாக உயர்வு ...
பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி: நூற்பாலைகள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2012
00:59

திருப்பூர்:கட்டுப்பாடுகளை தளர்த்தி, மீண்டும் செப்., வரை பருத்தி ஏற்றுமதிக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால், பருத்தி விலை உயரும் அபாயம் உருவாகி உள்ளதாக, நூற்பாலைகள் கவலை தெரிவித்துள்ளன.விளைச்சல்;நடப்பு பருத்தி ஆண்டின் துவக்கத்தில், 85 லட்சம் பருத்தி பொதிகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், சில மாதங்களிலேயே 90 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதியானதால், மத்திய அரசு உடனடியாக அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
அபரிமிதமான பருத்தி விளைச்சலால், பருத்தி ஏற்றுமதிக்கு, கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது.கடந்த ஏப்ரல் 18ம் தேதி, மும்பையில் ஜவுளித் துறை ஆணையர் தலைமையில், பருத்தி ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது. அப்போது, மொத்த விளைச்சல், 3.45 கோடி பொதிகளுக்கு மேல் இருக்கும் என்பதால், 1.15 கோடி பருத்தி பொதிகளை ஏற்றுமதி செய்ய பரிந்துரைக்கப்பட்டது. மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், பிரதமரை சந்தித்து வலியுறுத்தியதை தொடர்ந்து, பருத்தி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி, மீண்டும் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத் தலைவர் அப்புக்குட்டி, தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் ஆகியோர் கூறியதாவது:பருத்தி உற்பத்தி 3.45 கோடியில் இருந்து, 3.47 கோடி பொதிகளாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு தேவை 2.60 கோடியில் இருந்து, 2.50 கோடி பொதிகளாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தட்டுப்பாடு ஏற்படும்:நூற்பாலை தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அபரிமிதமாக பருத்தி ஏற்றுமதியானால், பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்படும். பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி என்ற அறிவிப்பு வெளியான ஒரே நாளில், பருத்தி பொதி, 37 ஆயிரம் ரூபாயில் இருந்து, 38 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் வரை பருத்தி ஏற்றுமதியை அனுமதித்துள்ளதால், அதன் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)