பதிவு செய்த நாள்
04 மே2012
00:59
திருப்பூர்:கட்டுப்பாடுகளை தளர்த்தி, மீண்டும் செப்., வரை பருத்தி ஏற்றுமதிக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால், பருத்தி விலை உயரும் அபாயம் உருவாகி உள்ளதாக, நூற்பாலைகள் கவலை தெரிவித்துள்ளன.விளைச்சல்;நடப்பு பருத்தி ஆண்டின் துவக்கத்தில், 85 லட்சம் பருத்தி பொதிகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், சில மாதங்களிலேயே 90 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதியானதால், மத்திய அரசு உடனடியாக அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
அபரிமிதமான பருத்தி விளைச்சலால், பருத்தி ஏற்றுமதிக்கு, கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது.கடந்த ஏப்ரல் 18ம் தேதி, மும்பையில் ஜவுளித் துறை ஆணையர் தலைமையில், பருத்தி ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது. அப்போது, மொத்த விளைச்சல், 3.45 கோடி பொதிகளுக்கு மேல் இருக்கும் என்பதால், 1.15 கோடி பருத்தி பொதிகளை ஏற்றுமதி செய்ய பரிந்துரைக்கப்பட்டது. மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், பிரதமரை சந்தித்து வலியுறுத்தியதை தொடர்ந்து, பருத்தி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி, மீண்டும் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத் தலைவர் அப்புக்குட்டி, தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் ஆகியோர் கூறியதாவது:பருத்தி உற்பத்தி 3.45 கோடியில் இருந்து, 3.47 கோடி பொதிகளாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு தேவை 2.60 கோடியில் இருந்து, 2.50 கோடி பொதிகளாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தட்டுப்பாடு ஏற்படும்:நூற்பாலை தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அபரிமிதமாக பருத்தி ஏற்றுமதியானால், பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்படும். பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி என்ற அறிவிப்பு வெளியான ஒரே நாளில், பருத்தி பொதி, 37 ஆயிரம் ரூபாயில் இருந்து, 38 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் வரை பருத்தி ஏற்றுமதியை அனுமதித்துள்ளதால், அதன் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|