பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி: நூற்பாலைகள் அதிர்ச்சிபருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி: நூற்பாலைகள் அதிர்ச்சி ... நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன்:ரூ.12,000 கோடியில் கடலூர் ஆலை விரிவாக்கம் நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன்:ரூ.12,000 கோடியில் கடலூர் ஆலை விரிவாக்கம் ...
மொபைல் போன் சந்தாதாரர்கள் 95 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2012
01:01

புதுடில்லி:சென்ற மார்ச் மாதம், உள்நாட்டில், மொபைல்போன் சந்தாதாரர் எண்ணிக்கை 80 லட்சம் அதிகரித்து, 95.13 கோடியாக உயர்ந்துள்ளது. முதலிடம்:மொபைல் போன் சேவையில் முதலிடத்தில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம், சென்ற மார்ச் மாதம் 25 லட்சம் புதிய சந்தாதாரர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், மார்ச் இறுதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் மொத்த மொபைல்போன் சந்தாதாரர் எண்ணிக்கை 18.12 கோடியாக உயர்ந்துள்ளது.
ஐடியா செல்லூலார் நிறுவனம் 2 லட்சம் புதிய சந்தாதாரர்களுக்கு மொபைல் போன் சேவையை வழங்கி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.யூனினார், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வோடபோன், சிஸ்டெமா ஷியாம் டெலிசர்வீசஸ் நிறுவனங்கள், முறையே 12.9 லட்சம், 10.4 லட்சம், 10.2 லட்சம் மற்றும் 4.2 லட்சம் புதிய சந்தாதாரர்களை இணைத்துக் கொண்டன.
பொதுத்துறையை சேர்ந்த பீ.எஸ். என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் முறையே 7.6 லட்சம் மற்றும் 58 ஆயிரத்து 681 சந்தாதாரர்களை சேர்த்துக் கொண்டுள்ளன. இதன் மூலம் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களின் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை முறையே 9.85 கோடி மற்றும் 58.30 லட்சமாக உள்ளது.
சரிவு நிலை:சென்ற மார்ச் மாதம், ஏர்செல், டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் முறையே 6.8 லட்சம், 1.4 லட்சம் மற்றும் 2.4 லட்சம் மொபைல்போன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.சாதாரண தொலைபேசி சந்தாதாரர் எண்ணிக்கை 0.48 சதவீதம் குறைந்து 3.21 கோடியாக சரிவடைந்துள்ளது. அகண்ட அலைவரிசை சந்தாதாரர் எண்ணிக்கை 1.35 கோடியில் இருந்து 1.38 கோடியாக அதிகரித்துள்ளது. எண்ணை மாற்றாமல் வேறொரு மொபைல் போன் நிறுவனத்தின் சேவைக்காக விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை, சென்ற மார்ச் நிலவரப்படி 47.6 லட்சமாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)