பதிவு செய்த நாள்
04 மே2012
01:01
புதுடில்லி:சென்ற மார்ச் மாதம், உள்நாட்டில், மொபைல்போன் சந்தாதாரர் எண்ணிக்கை 80 லட்சம் அதிகரித்து, 95.13 கோடியாக உயர்ந்துள்ளது. முதலிடம்:மொபைல் போன் சேவையில் முதலிடத்தில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம், சென்ற மார்ச் மாதம் 25 லட்சம் புதிய சந்தாதாரர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், மார்ச் இறுதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் மொத்த மொபைல்போன் சந்தாதாரர் எண்ணிக்கை 18.12 கோடியாக உயர்ந்துள்ளது.
ஐடியா செல்லூலார் நிறுவனம் 2 லட்சம் புதிய சந்தாதாரர்களுக்கு மொபைல் போன் சேவையை வழங்கி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.யூனினார், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வோடபோன், சிஸ்டெமா ஷியாம் டெலிசர்வீசஸ் நிறுவனங்கள், முறையே 12.9 லட்சம், 10.4 லட்சம், 10.2 லட்சம் மற்றும் 4.2 லட்சம் புதிய சந்தாதாரர்களை இணைத்துக் கொண்டன.
பொதுத்துறையை சேர்ந்த பீ.எஸ். என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் முறையே 7.6 லட்சம் மற்றும் 58 ஆயிரத்து 681 சந்தாதாரர்களை சேர்த்துக் கொண்டுள்ளன. இதன் மூலம் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களின் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை முறையே 9.85 கோடி மற்றும் 58.30 லட்சமாக உள்ளது.
சரிவு நிலை:சென்ற மார்ச் மாதம், ஏர்செல், டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் முறையே 6.8 லட்சம், 1.4 லட்சம் மற்றும் 2.4 லட்சம் மொபைல்போன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.சாதாரண தொலைபேசி சந்தாதாரர் எண்ணிக்கை 0.48 சதவீதம் குறைந்து 3.21 கோடியாக சரிவடைந்துள்ளது. அகண்ட அலைவரிசை சந்தாதாரர் எண்ணிக்கை 1.35 கோடியில் இருந்து 1.38 கோடியாக அதிகரித்துள்ளது. எண்ணை மாற்றாமல் வேறொரு மொபைல் போன் நிறுவனத்தின் சேவைக்காக விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை, சென்ற மார்ச் நிலவரப்படி 47.6 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|