மொபைல் போன் சந்தாதாரர்கள் 95 கோடியாக உயர்வுமொபைல் போன் சந்தாதாரர்கள் 95 கோடியாக உயர்வு ... நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன்:ரூ.12,000 கோடியில் கடலூர் ஆலை விரிவாக்கம் நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன்:ரூ.12,000 கோடியில் கடலூர் ஆலை விரிவாக்கம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உணவு சாரா வங்கி கடன் 16.9 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2012
01:02

மும்பை:சென்ற ஏப்ரல் மாதம் 20ம் தேதி வரையிலான, இரு வார காலத்தில், நாடு தழுவிய அளவில் வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன் 16.9 சதவீதம் அதிகரித்து, ஒட்டு மொத்த அளவில், 45 லட்சத்து 36 ஆயிரத்து 37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு சில மாதங்களாக, வங்கிகள் வழங்கிய கடன் வளர்ச்சி, 16 சதவீதம் என்றளவில் இருந்தது. அதேசமயம், கடந்த 2011-12ம் நிதியாண்டின், கடைசி இரு வார காலத்தில், இது, 18.2 சதவீதம் என்றளவில் அதிகரித்து காணப்பட்டது.
பணவீக்கம்:நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, ரிசர்வ் வங்கி, 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 2011ம் ஆண்டு அக்டோபர் வரையிலுமாக, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, 13 முறை உயர்த்தியது. மேலும், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதமும் உயர்த்தப்பட்டது.
நிதி ஆதாரம்:இதனால், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் பன்மடங்கு அதிகரித்தது. இதன் காரணமாக, பல நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தை திரட்டிக் கொள்ள முடியாமல் போனது. இது, நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் பின்னடைவிற்கு வழி வகுத்தது.
இச்சூழ்நிலையில், நாட்டின் பொதுப் பணவீக்கம் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததையடுத்து, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை குறைத்தது. அதன்பின், வங்கிகளுக்கான, "ரெப்போ ரேட்' விகிதங்களையும் சென்ற மாதம் 0.50 சதவீதம் குறைத்தது.
அடிப்படை வட்டி விகிதம்:இதைத் தொடர்ந்து, பல வங்கிகள், அடிப்படை வட்டி விகிதம், வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் மற்றும் திரட்டப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தையும் குறைத்து வருகின்றன. இந்நிலையில், வங்கிகள் உணவு சாரா துறைக்கு வழங்கும் கடன் அளவு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வங்கியாளர் ஒருவர் கூறுகையில், "சென்ற ஏப்ரல் 1ம் தேதி முதல், வங்கிகள் வழங்கிய கடன், 7,320 கோடி ரூபாய் குறைந்துள்ளது. இதற்கு, நிறுவனங்கள் மார்ச் மாதம் வரை வழங்கிய குறுகிய கால கடன்களை, நிறுவனங்கள் திரும்பச் செலுத்துவதுதான் காரணம்' என்று தெரிவித்தார்.
முதலீடு:பொதுவாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், நிறுவனங்கள், வங்கிகளிடமிருந்து பெறும் கடன் அளவு குறைவாகத்தான் இருக்கும். இக்காலாண்டில், நிறுவனங்கள், அவற்றின் புதிய திட்டங்கள், முதலீடு குறித்து ஆராயந்து அதன் பிறகே முடிவெடுக்கின்றன. எனவே, ஜூன் மாதத்திற்கு பிறகுதான், நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து பெறும் கடன் அளவு அதிகரிக்கும் என்று மற்றொரு வங்கியாளர் கருத்து தெரிவித்தார்.
அண்மையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெப்போ ரேட் விகிதத்தை குறைத்துள்ளது. இதனால், இனி வரும் மாதங்களில், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் வெகுவாக குறையும். இதுவும், வங்கிகளிடமிருந்து பெறும் கடன் அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
டெபாசிட் :இது குறித்த பொதுத்துறை வங்கியின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், வங்கிகள் வழங்கும் கடனும், திரட்டப்படும் டெபாசிட் அளவும் நல்ல அளவில் அதிகரிக்கும். குறிப்பாக, நடப்பு நிதியாண்டில், வங்கிகள் வழங்கும் கடன் 20 சதவீதம் என்றளவில் உயர வாய்ப்புள்ளது' என்று தெரிவித்தார்.
கடந்த ஒரு சில மாதங்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதனால், சர்வதேச அளவில், நிறுவனங்கள் பெறும் கடன் வளர்ச்சி எந்த அளவிற்கு இருக்கும் என்பதை தற்போது கணிக்க இயலாது என, சர்வதேச கடன் ஆய்வு நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)