பதிவு செய்த நாள்
04 மே2012
12:53
லண்டன்: அரிய வகை மதுபானம் லண்டனில், 35 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த பணம், உத்தரகண்ட் மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிக்கூடம் கட்ட பயன்படுத்தப்பட உள்ளது.பிரிட்டனின் பிரபல கிளென்பிடிச் மதுபான தொழிற்சாலையின் உரிமையாளர்கள், ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் அரிய வகை விஸ்கியை ஏலம் விட்டு, அதன் பணத்தை அறக்கட்டளைகளுக்கு தானமாக வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இந்த மதுபான தொழிற்சாலையை நிறுவியவர், வில்லியம் கிரான்டின் பேத்தி ஜேனட் ஷீட் ராபர்ட். கடந்த ஆண்டு, 110வது பிறந்த நாளை கொண்டாடிய ஜேனட், கடந்த ஏப்ரலில் காலமானார். 55 ஆண்டு கால பழமையான சிங்கிள் மால்ட் விஸ்கிக்கு, ஜேனட் பெயர் சூட்டப்பட்டு, சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. 35 லட்ச ரூபாய்க்கு இந்த விஸ்கி ஏலம் எடுக்கப்பட்டது. இந்த பணம் "லோட்டஸ் பிளவர்' அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்தியாவில் ராஜஸ்தான், உத்தரகண்ட், அசாம், லடாக் ஆகிய பகுதிகளில், கடந்த 20 ஆண்டுகளாக, பல்வேறு நல திட்டங்களை லோட்டஸ் பிளவர் அறக்கட்டளை நிறைவேற்றி வருகிறது. தற்போது ஏலம் விடப்பட்ட விஸ்கியின் மூலம் கிடைத்த பணத்தை இந்த அறக்கட்டளை, உத்தரகண்ட் மாநிலத்தில் மாற்றுத் திறனாளி மற்றும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியை கட்டுவதற்கு பயன்படுத்த உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|