சீனாவில் நவீன பாஸ்போர்ட் அறிமுகம் சீனாவில் நவீன பாஸ்போர்ட் அறிமுகம் ... அன்னிய செலாவணி கையிருப்பு:ரூ.14.76 லட்சம் கோடியாக உயர்வு அன்னிய செலாவணி கையிருப்பு:ரூ.14.76 லட்சம் கோடியாக உயர்வு ...
ரூ.640 கோடிக்கு ஏலம் போன ஓவியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2012
14:34

நியூயார்க்: பிரபல ஓவியர் மறைந்த எட்வர்ட் முங்க் என்பவர் வரைந்த, "தி ஸ்கிரீம்' என்ற ஓவியம் உலகிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் போனது. இந்த ஓவியத்தை, 640 கோடிக்கு ஏலம் வாங்கியவர் பெயர் அறிவிக்கப்படவில்லை.நார்வே நாட்டில், 1863ம் ஆண்டு பிறந்த எட்வர்ட் முங்க் சிறந்த ஓவியராக கருதப்பட்டார். அவர், முகபாவங்களை தத்ரூபமாக வெளிக்காட்டும் ஓவியங்களை வரைவதில் வல்லவராக திகழ்ந்தார். நோய் மற்றும் உறவினர் மரணத்தால் வாழ்க்கையில், அவர் மிகவும் சிரமப்பட்டார்.தனது வாழ்நாளில், இவர், 5,500க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார் என்றாலும், அவர் வரைந்த, "தி ஸ்கிரீம்' (கூக்குரல்) என்ற ஓவியம் தான் உலக புகழ்பெற்றது. இந்த ஓவியம் அமெரிக்காவில், "சோத்பீ' என்ற ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில், 11 கோடியே 99 லட்சத்து 22 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில், ரூ.640கோடி) விற்பனையானது. இதை ஏலத்தில் எடுத்தவர் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை.தன்னை சூழ்ந்துள்ள மிக பெரிய அலைகளில் இருந்து காப்பாற்றக்கோரி, ஒரு பெண், தன் இரு காதுகளையும் கைகளால் பொத்தி, வேதனையை வெளிப்படுத்தி, அபயக் கூக்குரல் எழுப்புவது போன்ற காட்சியை தான், இந்த, "கான்வாஸ்' ஓவியத்தில் அவர் சித்தரித்துள்ளார். இதை, அவர் தனது 30வது வயதில், 1893ம் ஆண்டு வரைந்துள்ளார். இவர், 1944ம் ஆண்டு காலமானார்.இதுவரை உலகில் பாப்லோ பிகாசோ வரைந்த, "தி நியூடு கிரீன் லீவ்ஸ் அண்டு பஸ்ட்' என்ற ஓவியம் தான் அதிகப்பட்சமாக, 568 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அதை விட, தற்போது எட்வர்ட் முங்க் வரைந்த ஓவியம் அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)