சீனாவின் இறக்குமதியால் உலக பருத்தி வர்த்தகம் சூடுபிடிக்கும்சீனாவின் இறக்குமதியால் உலக பருத்தி வர்த்தகம் சூடுபிடிக்கும் ... நகரங்களில் வசிப்போரில் 6 சதவீதம் பேர் இன்டர்நெட் இணைப்பு வைத்துள்ளனர் நகரங்களில் வசிப்போரில் 6 சதவீதம் பேர் இன்டர்நெட் இணைப்பு வைத்துள்ளனர் ...
பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையிலும்...நுகர்பொருள் நிறுவனங்களின் விற்பனை உயர்வு- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2012
02:33

நுகர்பொருள் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் விற்பனை, சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
பணவீக்கம் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையிலும், இந்நிறுவனங்களின் விற்பனையும், லாப வரம்பும் உயர்ந்துள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச்சுடன் முடிவடைந்த நான்காம் காலாண்டின் நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ள நுகர்பொருள் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் விற்பனை, இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது.நெஸ்லே முதல் புராக்டர் அண்டு கேம்பிள் ஹைஜீன் அண்டு ஹெல்த்கேர் நிறுவனம் வரை, பல நிறுவனங்களின் விற்பனை 13 சதவீதம் முதல் 39 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது. அதே சமயம், இவற்றின் நிகர லாபமும் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இந்த வளர்ச்சி, சந்தை மதிப்பீட்டையொட்டி உள்ளதாகக் கூறப்பட்டாலும், பணவீக்கம் காரணமாக, நுகர்வோர் செலவுகளைக் குறைத்துக்கொண்டுள்ளதையும் கவனிக்க வேண்டும் என, வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.எடல்வைஸ் நிறுவனத்தின் இணை இயக்குனர் அபினேஷ் ராய் கூறும்போது, "சூப் வகைகள், உயர் ரக சமையல் எண்ணெய்கள் மற்றும் நூடுல்ஸ் போன்றவற்றின் விற்பனை சரிவடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. செலவினம்:பணவீக்கம் அதிகரித்து, பொருள்களின் விலை உயரும்போது, மக்கள், இவ்வகை பொருள்களுக்காகச் செலவிடுவது குறித்து மிகவும் சிந்திக்கின்றனர்' என்று தெரிவித்தார்.
நாட்டின் பொது பணவீக்கம் :7 சதவீதத்திற்கும் சற்றே குறைவாக உள்ள நிலையில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையிலும், சென்ற நிதியாண்டின் நான்காம் காலாண்டில், நுகர்பொருள் நிறுவனங்களின், அளவு அடிப்படையிலான விற்பனை வளர்ச்சி, 9 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதே காலத்தில், விலை அடிப்படையிலான வளர்ச்சி 5 சதவீதம் முதல் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது.சோப்பு, டிடர்ஜென்ட்டுகள் போன்றவை, விலை அடிப்படையில் வளர்ச்சி கண்டுள்ளன.
இது குறித்து கோத்ரெஜ் குழுமத் தலைவர் ஆதி கோத்ரெஜ் கூறும்போது, "நுகர்பொருள் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சந்தையில் நுகர்பொருள்களுக்கான தேவை அதிகரித்துக் காணப்படும்' என்று தெரிவித்தார்.
ஆனால், தாபர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுனில் துகால் கூறும்போது, "நுகர்பொருள் துறையில் சரிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், ஒட்டு மொத்த அளவில் வருவாய் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்' என்றார்.
மூன்றாவது காலாண்டு:சென்ற ஜனவரியில் இருந்து மார்ச் வரையிலான காலத்தில், 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய நுகர்பொருள் சந்தை 14 சதவீதம வளர்ச்சி கண்டுள்ளது. இது,முந்தைய மூன்றாம் காலாண்டில் 19 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.
இது குறித்து, ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஸ்ரீதர் கூறியதாவது: இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்கது என்ற போதிலும், அடுத்து வரும் காலாண்டுகளில் உருவாகும் நிலைமையை பொறுத்துத்தான் எதையும் கூற முடியும். என்று தெரிவித்தார்.
மத்திய அரசு, விரைவில் எரிபொருள் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வரும் காலாண்டுகளில், நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்கம் உயரும். அப்போது, நிறுவனங்கள் நுகர்வோர் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை உண்டாகும்.
நிறுவனங்கள், நுகர்பொருள்களை சந்தைப்படுத்த, விளம்பரங்களுக்காக அதிகம் செலவிடுகின்றன. மேலும், குறைந்த அளவிலேயே பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளன. இதனால், இந்நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்துள்ளது. இந்நிலையில், எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால், அது, இந்நிறுவனங்களின் லாப வரம்பில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
விளம்பர செலவு:சென்ற மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில், நுகர்பொருள் நிறுவனங்களின் விளம்பரச் செலவு, சராசரியாக 13-14 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, முந்தைய காலாண்டில் 10-12 சதவீதமாக இருந்தது."சந்தையில் போட்டி அதிகரிக்கும்பட்சத்தில், விளம்பரங்களுக்காகத் தொடர்ந்து செலவிடுவது அவசியமாகும்' என விப்ரோ கன்ஸ்யூமர் கேர் அண்டு லைட்டிங் நிறுவனத்தின் தலைவர் வினீத் அகர்வால் தெரிவித்தார்.வரும் காலாண்டுகளில், நுகர்பொருள் நிறுவனங்கள்,விளம்பரங்களுக்கான செலவினங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)