பதிவு செய்த நாள்
07 மே2012
10:42
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 289.85 புள்ளிகள் குறைந்து 16541.23 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 91.15 புள்ளிகள் குறைந்து 4995.70 புள்ளிகளோடு காணப் பட்டது. வங்கிகள், ரியாலிட்டி,கேபிடல் குட்ஸ், மெட்டல் மற்றும் ஆட்டோ ஆகிய நிறுவனப்பங்குகள் சரிவில் காணப்பட்டன. கடந்த வெள்ளியன்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 320 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 16,831 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 102 புள்ளிகள் குறைந்து, 5,087 புள்ளிகளிலும் நிலை கொண்டன. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு வேகமாக சரிவடைந்து வருகிறது. வர்த்தக நேர துவக்கத்தின் போது, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 53.60 ஆக மிகவும் சரிவடைந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|