பதிவு செய்த நாள்
10 மே2012
00:00
சென்னை: டாட்டா @டாகோமோ, ஜி.எஸ்.எம்.வாடிக்கையாளர்களுக்கு, மொபைல் சாதனத்துடன் கூடிய, புதிய சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி (தமிழகம் வட்டம்) ராஜன் குப்தா கூறியதாவது:வாடிக்கையாளர்கள், 4,000 ரூபாய்க்கும் அதிகமான விலையில், நோக்கியா, சாம்சங், எச்.டி.சி., ஹவேய், பிளாக் பெர்ரி போன்ற ஸ்மார்ட் மொபைல் சாதனங்களை தேர்ந்தெடுத்து, அதனுடன் நிறுவனத்தின் இலவச டாக்டைம் பெறலாம்.இதற்காக, ஜி.எஸ்.எம். (போஸ்ட் பே திட்டம்)வாடிக்கையாளர்கள்,"டயட் 299', "டயட் 499' அல்லது "டயட் 799' ஆகிய திட்டங்களில், விருப்பமானதை தேர்ந்தெடுத்து, உள்ளூர் அழைப்புகளில், 600 நிமிடங்கள் மற்றும் 400 உள்ளூர், தேசிய எஸ்.எம்.எஸ்.,களை இலவசமாக பெறலாம். இவ்வாறு குப்தா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|