பதிவு செய்த நாள்
10 மே2012
00:01
மும்பை: நாட்டில் கள்ளநோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்த, 500, 1,000 ரூபாய் நோட்டுகளின் வடிவத்தையும், வண்ணத்தையும் மாற்றியமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வர்த்தக தலைநகராக விளங்கும் மும்பையில், மேற்கு ரயில்வேயின் டிக்கெட் விற்பனை பிரிவுகளில் மட்டும், மாதம் சராசரியாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை கள்ளநோட்டுகள் சிக்குகின்றன.நல்ல நோட்டுகள் போன்றே காணப்படும் கள்ள நோட்டுகளின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கள்ள நோட்டைக் கண்டறியும் சாதனங்கள் உள்ளன. இவற்றால் கூட, 100 சதவீத கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க முடிவதில்லை. அந்த அளவிற்கு, அச்சு அசலாக கள்ளநோட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.இதன் காரணமாகவே, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை நவீன தொழில்நுட்பத்தில், புதிய வடிவமைப்பில் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.பொதுவாக, ரிசர்வ் வங்கி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூபாய் நோட்டின் வடிவமைப்பு மற்றும் வர்ணங்களை மாற்றுவது வழக்கம். தற்போது, கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து விட்டதால், உடனடியாக ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிŒர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரி @மலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|