சூரிய மின் சக்தி சாதனங்கள்இறக்குமதிக்கு வரி சலுகை சூரிய மின் சக்தி சாதனங்கள்இறக்குமதிக்கு வரி சலுகை ... ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.67,500 கோடி ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.67,500 கோடி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
வெங்காயம் ஏற்றுமதி 15 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2012
00:04

புதுடில்லி: சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் வெங்காயம் ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்து 15 லட்சத்து 48 ஆயிரத்து 254 டன்னாக அதிகரித்துள்ளது. இது, நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் (157.48 லட்சம் டன்) 9.8 சதவீதமாகும்.முந்தைய 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் வெங்கயம் உற்பத்தி, 151.17 டன்னாக இருந்தது. இதில், 8.9 சதவீதம், அதாவது 13 லட்சத்து 40 ஆயிரத்து 772 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது.நிலையற்ற கொள்கைசர்வதேச சந்தையில் வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்து வருவதும், உற்பத்தி அதிகரிப்பும், அதன் ஏற்றுமதியை அதிகரிக்க துணை புரிந்துள்ளது. உள்நாட்டில் வெங்காயம் அமோகமாக விளைந்த போதிலும், அதற்கேற்ப ஏற்றுமதி இல்லை. ஏனெனில்,வெங்காய ஏற்றுமதி தொடர்பான மத்திய அரசின் தெளிவற்ற கொள்கை மற்றும் வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, மிக அதிகமாக நிர்ணயித்தது ஆகியவையே காரணம் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.மத்திய அரசு, கடந்த ஆண்டு செப்டம்பரில் வெங்காய ஏற்றுமதி மீதான தடையை நீக்கிய போதிலும், அதன் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை, டன்னுக்கு 475 டாலராக நிர்ணயித்தது.@காரிக்கைஇதை குறைக்க வேண்டும் என விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை, மத்திய அரசு பல கட்டங்களாக, படிப் படியாக குறைத்தது.இறுதியாக, நடப்பு மே மாதம் 2ம் தேதி வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை ரத்து செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதனால், நடப்பு நிதியாண்டில் வெங்காயம் ஏற்றுமதி உயரும். விவசாயிகளும் ஊக்கத்துடன் வெங்காய சாகுபடி மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியா, வெங்காய ஏற்றுமதியில் முதலிடத்தில் இருந்தது. சர்வதேச சந்தையில், சீனா, எகிப்து ஆகிய நாடுகளின் தீவிர போட்டியால், தற்போது இந்தியா, பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனாவின் தரக் கட்டுப்பாடு தொடர்பான உத்தரவு குறித்து, கடந்த ஓராண்டாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறது. தடை உத்தரவு அமலுக்கு வர இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், இப்பிரச்னைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காண வேண்டியது அவசியம் என, இத்துறை சார்ந்த ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)