பதிவு செய்த நாள்
10 மே2012
00:05
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -வரும் ஜூன் மாதம், 1ம் தேதி முதல், இந்திய கடல் உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு, சீனா தடை விதிக்க உள்ளது. இதையடுத்து, இந்திய வர்த்தகர்கள், சென்ற ஏப்ரல் மாத இறுதியில் இருந்தே, சீனாவிற்கு கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளனர். குஜராத்தற்போது, ஏற்றுமதி செய்யப்பட்ட கடல் உணவுப் பொருட்கள், தடை அமலுக்கு வருவதற்கு முன்பாக சீனாவிற்கு போய் சேருமா என்ற கவலையும் வர்த்தகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இந்தியாவிலிருந்து, சீனாவிற்கு மேற்கொள்ளப்படும் மொத்த கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில், குஜராத்தின் பங்களிப்பு, 70 சதவீதமாக உள்ளது. இம்மாநிலத்தில் இருந்து, ஆண்டுதோறும் சராசரியாக 90 ஆயிரம் டன் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. இது, நாட்டின் ஒட்டுமொத்த கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதியில், 11 சதவீதமாகும். இதன் மதிப்பு, 1,151 கோடி ரூபாயாகும். சீனா, இந்தியாவிலிருந்து மலிவு விலை மீன்களையே அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது.இந்தியாவிலிருந்து, 700க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், சீனாவுக்கு கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதில், 90 சதவீதத்தினர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.சென்ற ஆண்டு, சீனா, கடல் உணவுப் பொருட்கள் வர்த்தகம் குறித்த, தரக் கட்டுப்பாட்டு அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, தரம் மேற்பார்வை, ஆய்வு, கண்காணிப்பு பொது நிர்வாகம் (ஏ.கியூ.எஸ்.ஐ.க்யூ.) என்ற அமைப்பை ஏற்படுத்தி, இதன் அனுமதி இருந்தால் மட்டுமே, இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தது. வெளிநாடுகள் அனுப்பும் கடல் உணவுப் பொருட்களை ஆய்வு செய்து, அதன் தரத்தை மதிப்பிட்டு,அவற்றால் பாதிப்பில்லை என்ற சான்றிதழ் வழங்கும் பணியை இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது.இந்தியா தவிரஇதன்படி, இந்த அமைப்பின் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி, கடல் உணவுகளை ஏற்றுமதி செய்த, 27 நாடுகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அங்கீகாரம் வழங்கப்பட்டது.ஆசிய நாடுகளில், இந்தியா தவிர்த்து, வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், ஜப்பான், பிலிப்பைன்ஸ், மியான்மர் மற்றும் தென்கொரியா ஆகிய ஏழு நாடுகளுக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பாதிப்புஇவை தவிர, 10 ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவை உள்ளடக்கிய 7 நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கடல் உணவு பொருட்களை சீனாவில் இறக்குமதி செய்து கொள்ள ஏ.கியூ.எஸ்.ஐ.க்யூ. அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில், வரும் ஜுன் மாதம் முதல், சீனாவின் தடை உத்தரவு, அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர உள்ளது. இதனால், ஏ.கியூ.எஸ்.ஐ.க்யூ. வின் அங்கீகாரம் இல்லாமல், இந்திய வர்த்தகர்கள் கடல் உணவுப் பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குஜராத்தை சேர்ந்த ஏற்றுமதியாளர்களும், அவர்களை சார்ந்துள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.மவுனம் குஜராத்தில், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடல் சார்ந்த, ஏற்றுமதி துறையில், 20 ஆயிரம் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில், பெண்களே அதிகளவில் உள்ளனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|