பதிவு செய்த நாள்
10 மே2012
00:06
ஆமதாபாத்: சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 1,350 கோடி டாலராக (67 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் பங்களிப்பு, 80 சதவீதம் என்றளவில் உள்ளது. சென்ற நிதியாண்டில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 1,350 கோடி டாலராக (67 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 20 சதவீதம் (1,100 கோடி டாலர் - 55 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகமாகும்.நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில், ஆயத்த ஆடைகளின் பங்களிப்பு, 45 சதவீதமாக உள்ளது. இதே நிதியாண்டுகளில், ஜவுளி ஏற்றுமதி, 2,700 கோடி டாலர் (1 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய்) என்றளவிலிருந்து, 3,000 கோடி டாலராக (1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|