ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.67,500 கோடி ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.67,500 கோடி ... கோதுமை, நெல்லை பாதுகாக்க சாக்கு பைகள் தட்டுப்பாடு: பிரணாப் ஒப்புதல் கோதுமை, நெல்லை பாதுகாக்க சாக்கு பைகள் தட்டுப்பாடு: பிரணாப் ஒப்புதல் ...
பெரிய துறைமுகங்களை காட்டிலும்...சரக்கு கையாள்வதில் சிறிய துறைமுகங்கள் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2012
00:07

சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளாக, சரக்கு கையாள்வதில், பெரிய துறைமுகங்களை விட, சிறிய துறைமுகங்கள் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றன. இந்தியாவில் சென்னை, பரதீப், கோல்கட்டா உள்ளிட்ட, 12 பெரிய துறைமுகங்களும், தமிழகத்தில் கடலூர், நாகை, வாலிநோக்கம் உட்பட, 187 சிறிய, நடுத்தரமான துறைமுகங்களும் உள்ளன.இரும்பு தாதுபெரிய துறைமுகங்கள் கையாளும் சரக்குகளில், கச்சா எண்ணெய், இரும்புத் தாது, நிலக்கரி உள்ளிட்டவை முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளன. இந்நிலையில், சுரங்க முறைகேடு தொடர்பாக, இரும்புத் தாது ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையால், பெரிய துறைமுகங்கள் அதை கையாள்வது குறைந்துள்ளது. இதனால், இத்துறைமுகங்களின் ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்து வளர்ச்சி சுணக்கம் கண்டுள்ளது.சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2011-12ம் நிதியாண்டில், பெரிய துறைமுகங்கள் சரக்கை கையாண்டதில், முந்தைய நிதியாண்டை விட, 1.73 சதவீதம் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளன. இதே ஆண்டுகளில், இத்துறைமுகங்கள் இரும்புத் தாதுவை கையாண்டது, 30 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், சிறிய துறைமுகங்கள், சரக்கை கையாள்வதில் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றன. பங்களிப்புதனியார் நிறுவனங்கள், சிறிய துறைமுகங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மிக அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, சரக்கை கையாள்வதில், பெரிய துறைமுகங்களை விட, சிறிய துறைமுகங்களின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.சென்ற நிதியாண்டில், பெரிய மற்றும் சிறிய துறைமுகங்கள் மொத்தம், 93 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளன. இதில், பெரிய துறைமுகங்களின் பங்களிப்பு, 56 கோடி டன்னாகவும், சிறிய துறைமுகங்களின் பங்களிப்பு, 37 கோடி டன்னாகவும் உள்ளது.முந்தைய 2010-11ம் நிதியாண்டில், பெரிய மற்றும் சிறிய துறைமுகங்கள் மொத்தம், 88.50 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளன. இதில், பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் பங்களிப்பு, முறையே, 57 கோடி டன் மற்றும் 31.50 கோடி டன்னாக இருந்தது.அதற்கு முந்தைய 2009-10ம் நிதியாண்டு,மொத்தம் கையாளப்பட்ட 85 கோடி டன் சரக்குகளில், பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் பங்களிப்பு, முறையே நிலக்கரிமேற்கண்ட புள்ளி விவரப்படி, கடந்த இரண்டு நிதியாண்டுகளில், சரக்கை கையாண்டதில், சிறிய துறைமுகங்களின் வளர்ச்சி 33.98 சதவீதத்தில் இருந்து 39.77 சதவீதமாக அதிகரித்துள்ளது.அதே சமயம், இதே ஆண்டுகளில், சரக்கை கையாண்டதன் அடிப்படையில், பெரிய துறைமுகங்களின் வளர்ச்சி 66 சதவீதத்தில் இருந்து 60.22 சதவீதமாக குறைந்துள்ளது.சிறிய துறைமுகங்கள் நிலக்கரி, உரம், சரக்கு பெட்டகங்கள் உள்ளிட்டவற்றை அதிகமாக கையாண்டு வருகின்றன. நாட்டில் நிலக்கரி அடிப்படையிலான புதிய மின் உற்பத்தி திட்டப் பணிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்து, மின் உற்பத்தி துவங்கும்போது, நிலக்கரியின் தேவை அதிகரிக்கும். இதையடுத்து, அதிக அளவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என்பதால், வரும் ஆண்டுகளில் சிறிய துறைமுகங்களுக்கு சிறப்பான வர்த்தக வாய்ப்பு உள்ளதாக இத்துறையினர் தெரிவித்துள்ளனர்.தற்போது, சாலை வசதிகள், விமானம், ரயில் இணைப்பு பாதைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடுகள் தான், பல்வேறு சிறிய துறைமுகங்களின் வளர்ச்சிக்கு தடைக் கற்களாக உள்ளன. இவற்றுக்கு தீர்வு காணும்பட்சத்தில், வரும் ஆண்டுகளில் சிறிய துறைமுகங்களின் வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விரிவாக்கம்அதே சமயம், பெரிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்த மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன்படி, துறைமுகங்களை ஆழப்படுத்துதல், கப்பல் நிறுத்தும் தளங்களை விரிவுபடுத்துதல், இணைப்பு சாலை, ரயில் போக்குவரத்து வசதி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சரக்கை கையாள்வதில், அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)