பெரிய துறைமுகங்களை காட்டிலும்...சரக்கு கையாள்வதில் சிறிய துறைமுகங்கள் சாதனை பெரிய துறைமுகங்களை காட்டிலும்...சரக்கு கையாள்வதில் சிறிய துறைமுகங்கள் ... ... இந்தியன் ஏர்லைன்ஸ் உடன் ஏர் இந்தியாவை இணைப்பது தவறானது - அஜித் சிங் இந்தியன் ஏர்லைன்ஸ் உடன் ஏர் இந்தியாவை இணைப்பது தவறானது - அஜித் சிங் ...
கோதுமை, நெல்லை பாதுகாக்க சாக்கு பைகள் தட்டுப்பாடு: பிரணாப் ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2012
10:23

புதுடில்லி : நாட்டின் உணவுதானிய உற்பத்தி என்பது, முன்னெப்போதும் இல்லாததை காட்டிலும் அதிகமாக, இந்த ஆண்டு இருந்ததால், கோதுமை,நெல் ஆகியவற்றை சேமித்து வைக்க அரசு கிட்டங்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், தங்களது உணவுதானியங்களை வீதிகளிலும், கோவில்களிலும், மசூதிகளிலும் கொட்டி வைத்து உள்ளனர். நாடெங்கிலும் இதே நிலைமை நீடித்து வருகிறது.

உணவு, தானியங்கள் வீணாவது குறித்து, லோக்சபாவில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தின் முடிவில் பதிலளித்த, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: உணவுதானியங்களை சேமித்து வைக்கும் விஷயத்தில், பிரச்னை தீவிரமாக இருப்பது உண்மை தான். சணல் சாக்குப்பைகளுக்கு கடும் தட்டுப்பாடு இதற்கு மிக முக்கிய காரணம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில், மத்திய உணவு அமைச்சகத்தை மாநில அரசு பிரதிநிதிகள் அணுகி, தங்களுக்கு தேவையான சாக்குகளின் எண்ணிக்கையை சொல்லுவர் . இதன் அடிப்படையில், மத்திய அரசின் வினியோக இயக்குனரகம் வாயிலாக, மேற்குவங்கத்தில் உள்ள சணல் சாக்குப்பை தொழிற்சாலைக்கு தகவல் அனுப்பி, அதைப்பெற்று முன்னதாகவே மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

இந்த ஆண்டு, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு போதிய சாக்குப்பைகள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. மத்திய பிரதேசத்திலும், உத்தரபிரதேசத்திலும் தான் பிரச்னை. மத்திய பிரதேசத்தில் கடந்த நவம்பரில், எதிர்பார்க்கப்பட்ட கொள்முதல் 65 லட்சம் டன் மட்டுமே. ஆனால், இது 85 லட்சம் டன் கொள்முதல் ஆகிவிட்டது. உத்தரபிரதேசத்திலும் இதேபோல பிரச்னை உள்ளது. இது, மத்திய அரசுக்கு கவலையாகத்தான் உள்ளது.

மழைக்காலம்: மழைக்காலம் வேறு வரப்போவதால், போர்க்கால நடவடிக்கை என்பது, இவ்விஷயத்தில் அவசியமாகிறது. மேற்குவங்க சாக்குப்பை தொழிற்சாலையில் மாதம் ஒன்றுக்கு, 2 லட்சத்து 50 ஆயிரம் பைகள் தயாரிக்கப்படுகின்றன. இதை இன்னும் கூடுதலாக, 25 ஆயிரம் பைகள் தயாரிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோதுமை கூலி: ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் தற்போது கூலி தரப்பட்டு வருகிறது. இதை மாற்றிவிட்டு கூலிக்கு பதிலாக, கோதுமையையும், அரிசியையும் கூட அளிக்கலாமா என்றும், அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. ஆனாலும், இதுகுறித்து உடனடியாக இன்னும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. உணவுதானியங்கள் வீணாகக் கூடாது. விவசாயிகளின் விளைச்சல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு விரைவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் கூட அழைத்துப் பேசி, ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவும் திட்டம் உள்ளது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)