விசைத்தறி தொழிலாளர்களுக்கு மின்சார கட்டணம் குறைப்பு : ஜெ., அறிவிப்புவிசைத்தறி தொழிலாளர்களுக்கு மின்சார கட்டணம் குறைப்பு : ஜெ., அறிவிப்பு ... கிங்பிஷர் ஊழியர்கள் மீண்டும் ஸ்டிரைக்! கிங்பிஷர் ஊழியர்கள் மீண்டும் ஸ்டிரைக்! ...
இந்தியாவில் தேயிலை உற்பத்தி 13 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2012
15:35

புதுடில்லி : ஜனவரி முதல் மார்ச் மாதம் முடிய இந்தியாவில் தேயிலை உற்பத்தி 13 சதவீதம் சரிவடைந்துள்ளது. உலகளவில் அனைவராலும் பருகப்படும் பானம் டீ. உலகில் அதிக தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் முடிய தேயிலை உற்பத்திக்கான அளவீட்டை தேயிலை ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஜனவரி மாதத்தில் 18.69 மில்லியன் கிலோவும், பிப்ரவரி மாதத்தில் 16மில்லியன் கிலோவும், மார்ச் மாதத்தில் 47.60 மில்லியன் கிலோவும் உற்பத்தி செய்து இருக்கிறது. கடந்த 3 மாதங்களில் இந்தியாவில் மொத்தம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை 82.29 மில்லியன் கிலோவாகும். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 13 சதவீதம் சரிவாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 94.39 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்திருந்தது.

வட இந்தியாவை பொறுத்தமட்டில் அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகி‌ய மாநிலங்களில் 19.86 மில்லியன் கிலோவும், 17.53 கிலோவும் பிற மாநிலங்களில் சேர்த்து மொத்தம் 37.52 மில்லியன் கிலோவும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 45.55 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது.

தென் இந்தியாவை பொறுத்தமட்டில் தேயிலை உற்பத்தியில் கடந்த 3 மாதங்களில் 48.84(கடந்த ஆண்டு) மில்லியன் கிலோவில் இருந்து 44.77 மில்லியன் கிலோவாக குறைந்திருக்கிறது.

பொதுவாக கோடை காலங்களில் வெயில் அதிகமாக இருப்பதால், வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும், இதனால் உற்பத்தி சற்று பாதிக்கப்படுவது இயல்பு தான் என்று தேயிலை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)