பதிவு செய்த நாள்
11 மே2012
00:10
புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ஓராண்டில் இல்லாத அளவிற்கு 1,340 கோடி டாலராக (67 ஆயிரம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, மத்திய வர்த்தக செயலர் ராகுல் குல்லார் தெரிவித்துள்ளார்.நடப்பு நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 3.2 சதவீதம் உயர்ந்து, 2,450 கோடி டாலராக (1 லட்சத்து 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.
இதே மாதங்களில், இறக்குமதி, 3.8 சதவீதம் உயர்ந்து, 3,790 கோடி டாலராக (1 லட்சத்து 89 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. சென்ற ஏப்ரல் மாதத்தில், ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரித்துள்ளதால், வர்த்தக பற்றாக்குறை, 1,340 கோடி டாலராக உள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை சற்று குறைவாக இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி, 7 சதவீதம் உயர்ந்து, 1,390 கோடி டாலராக (69 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உள்ளது. இது, இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில், 32.5 சதவீதம் உயர்ந்து, 1,580 கோடி டாலராக (79 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்திருந்தது என, குல்லார் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|