பதிவு செய்த நாள்
11 மே2012
00:34
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக்கிழமையன்றும் மிகவும் மோசமாக இருந்தது. மதியம் வரையில் ஏற்றத்தில் இருந்த பங்கு வர்த்தகம், ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு மற்றும் சர்வதேச நிலவரங்களால் சுணக்கம் கண்டது.சீனாவின் வர்த்தக வளர்ச்சி மந்தமாக உள்ளது என்ற தகவலால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஓரளவிற்கு சூடுபிடித்து காணப்பட்டது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், மோட்டார் வாகனம், வங்கி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது. இருப்பினும், எண்ணெய், எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில், 1,524 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 1,239 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 145 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றமின்றியும் இருந்தன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 59.53 புள்ளிகள் சரிவடைந்து, 16,420.05 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,671.81 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,377.02 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 10 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 20 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 9.10 புள்ளிகள் குறைந்து, 4,965.70 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,039.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,950.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|