இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ... ஊதிய பிரச்னை : கிங்பிஷர் ஊழியர்கள் ஸ்டிரைக்கால் 12 விமானங்கள் ரத்து ஊதிய பிரச்னை : கிங்பிஷர் ஊழியர்கள் ஸ்டிரைக்கால் 12 விமானங்கள் ரத்து ...
ஏர் இந்தியா பைலட்டுகள் போராட்டம் நீடிப்பு: வெளிநாடுகளுக்கான டிக்கெட் பதிவு நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2012
10:58

புதுடில்லி: பைலட்டுகளின் போராட்டம் நேற்றும் தொடர்ந்ததால், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான டிக்கெட் பதிவுகளை, ஏர் இந்தியா நிறுவனம் வரும் 15ம் தேதி வரை நிறுத்தியுள்ளது. அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் ஒன்பது பைலட்டுகள் நேற்று நீக்கம் செய்யப்பட்டனர். பைலட்டுகளின் போராட்டம் காரணமாக, டில்லி, மும்பையில் இருந்து ஜெர்மனி, கனடா, சீனா அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு இயக்கப்பட வேண்டிய 20 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

பதவி உயர்வு, போயிங் 787 டிரீம் ஏர் லைனர் விமானத்திற்கான பயிற்சித் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏர் இந்தியா விமான நிறுவன பைலட்டுகளில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும், இந்திய பைலட் கில்டு சங்கத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பைலட்டுகள், உடல்நலம் சரியில்லை என்று கூறி, ஒட்டுமொத்தமாகப் பணிக்கு வரவில்லை.விமானங்கள் ரத்து இந்தப் போராட்டத்தால், உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்றும் பைலட்டுகள் வேலை நிறுத்தம் தொடர்ந்ததால், டில்லியில் இருந்து பிராங்க்பர்ட், ஷாங்காய், டொரன்டோ, நியூஜெர்சி, சிகாகோ மற்றும் சியோல் நகரங்களுக்கான, 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல், மும்பையில் இருந்து நியூயார்க், ரியாத் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கான எட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. அத்துடன் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான டிக்கெட் பதிவை வரும் 15ம் தேதி வரை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்திவைத்துள்ளது.

பைலட்டுக்கள் போராட்டத்தால் ஏர் இந்தியா நிறுவனம் கடும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. நேற்று மட்டும் ஒன்பது பைலட்டுகளை பணி நீக்கம் செய்துள்ளது. இதையடுத்து, இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்ட பைலட்டுக்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது.வாழ்வா, சாவா பிரச்னைஏர் இந்தியா நிறுவனம், இப்படி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்திய பைலட்டுகள் கில்டு சங்கத்தினர், தங்களின் நிலையில் பிடிவாதமாக உள்ளனர். "பணி நீக்க உத்தரவுகளை, ஏர் இந்தியா நிறுவனம் வாபஸ் பெற வேண்டும். அதுவரை பணிக்குத் திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த விவகாரத்தில், பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் தலையிட வேண்டும். இது வாழ்வா, சாவா பிரச்னை' என்றனர்.

பைலட்டுகளின் வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது' என, டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்து விட்டது. இருந்தும், அவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிடவில்லை. நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும். நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதவர்கள், நான் சொல்வதை கேட்பார்களா?' என்றனர். "எந்த பிரச்னையையும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால், அவர்கள் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும். ஏர் இந்தியா மீது பயணிகள் வைத்துள்ள மதிப்பு கெடாமல், பைலட்டுக்கள் செயல்படவேண்டும்' என்றும் அவர் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)