பதிவு செய்த நாள்
11 மே2012
17:11
மும்பை : சரிவுடன் தொடங்கிய பங்குவர்த்தகம் 127 புள்ளிகள் சரிவுடனேயே முடிந்தது. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி மற்றும் கிரீஸ் நாட்டில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பு உள்ளிட்டவற்றால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
வர்த்தக நேரமுடிவின் போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 127.07 புள்ளிகள் சரிந்து 16,292.98-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 36.80 புள்ளிகள் சரிந்து 4,928.90-ஆக காணப்பட்டது. இந்திய பங்குசந்தையின் மதிப்பை அறிய உதவும் 30 பங்குகளில் 21 பங்குகள் சரிவை சந்தித்தன.
மார்ச் மாதத்திற்கான தொழிற்சாலைகளின் உற்பத்தி 3.5 சதவீதம் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இந்திய பங்குசந்தைகள் சரிவை சந்தித்தாக பங்கு முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|