பதிவு செய்த நாள்
12 மே2012
00:20
பொதுத் துறையைச் சேர்ந்த தேனா பேங்க், சென்ற நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, 30 சதவீத டிவிடெண்டு வழங்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு 3 ரூபாய் டிவிடெண்டு கிடைக்கும்.
இவ்வங்கி, மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில்,
255 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 62 சதவீதம் (157 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் 27 சதவீதம் வளர்ச்சி கண்டு 598 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வங்கி, சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், 803 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 31 சதவீதம் (612 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே நிதியாண்டுகளில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய், 19 சதவீதம் அதிகரித்து, 2,102 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|