பதிவு செய்த நாள்
12 மே2012
00:21
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கி, சென்ற நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, 75 சதவீத டிவிடெண்டு அறிவித்துள்ளது.இதுகுறித்து இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.எம்.பாசின் கூறியதாவது:சென்ற நிதியாண்டில், வங்கியின், மொத்த வர்த்தகம், 2 லட்சத்து 11 ஆயிரத்து 988 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 16.80 சதவீதம் (1 லட்சத்து 81 ஆயிரத்து 530 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதில், திரட்டப்பட்ட டெபாசிட்டுகள், 14.2 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1 லட்சத்து 20 ஆயிரத்து 804 கோடி ரூபாயாகவும், வழங்கப்பட்ட கடன்கள், 20.4 சதவீதம் உயர்ந்து, 75 ஆயிரத்து 726 கோடியிலிருந்து, 91 ஆயிரத்து 184 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதே நிதியாண்டுகளில், நிகர லாபம், 1,714 கோடியிலிருந்து, 1,747 கோடி ரூபாயாகவும், மொத்த வருவாய், 27.7 சதவீதம் அதிகரித்து, 10 ஆயிரத்து 543 கோடியிலிருந்து, 13 ஆயிரத்து 463 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.வங்கி, முன்னுரிமை துறைக்கு வழங்கிய கடன், 15.6 சதவீதம் உயர்ந்து, 30 ஆயிரத்து 27 கோடி ரூபாயாகவும், வேளாண் துறைக்கு வழங்கிய கடன், 20.9 சதவீதம் அதிகரித்து, 13 ஆயிரத்து 354 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.சென்ற நிதியாண்டில், வங்கியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததை அடுத்து, பங்குதாரர்களுக்கு 75 சதவீத டிவிடெண்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாசின் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|