பதிவு செய்த நாள்
12 மே2012
00:24
புதுடில்லி:கடந்த மூன்று ஆண்டுகளில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், 32 பொதுத் துறை நிறுவனங்களில், புதிதாக, 13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மத்திய கனரக தொழில் துறையின் கீழ், பீ.எச்.இ.எல்., எச்.எம்.டி., பிரிட்ஸ் அண்டு ரூப் கம்பெனி, ராஜஸ்தான் எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்ட், பாரத் பம்ப்ஸ் அண்டு கம்ப்ரசர்ஸ், இந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேஷன் உள்ளிட்ட, 32 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேற்கண்ட நிறுவனங்களில், கடந்த 2009-10ம் நிதியாண்டு முதல் 2011-12ம் நிதியாண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில், புதிதாக, 13 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த 32 நிறுவனங்களில், பணிபுரியும் பணியாளர்கள் எண்ணிக்கை, 1 லட்சத்து 14 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 1 லட்சத்து 13 ஆயிரத்து 311 ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|