பதிவு செய்த நாள்
12 மே2012
00:28
புதுடில்லி:நடப்பு பருத்தி பருவத்தில் (அக்டோபர்- செப்டம்பர்), இதுவரையிலுமாக, தேசிய பருத்தி கழகம், 12 லட்சம் குவிண்டாலுக்கும் அதிகமான அளவில், பருத்தியை கொள்முதல் செய்துள்ளது என, மத்திய ஜவுளி துறையின் இணை அமைச்சர் பனபகா லட்சுமி, பார்லிமென்டில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:தேசிய பருத்தி கழகம், விவசாயிகளிடம் இருந்து, பருத்தியை கொள்முதல் செய்து வருகிறது. நடப்பு பருவத்தில் இதுவரையிலுமாக, ஒரு குவிண்டால், 3,949 ரூபாய் என்ற விலையில், ஆந்திராவிலிருந்து, 2.09 லட்சம் குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், மகாராஷ்டிராவிலிருந்து, ஒரு குவிண்டால், 4,075 ரூபாய் என்ற விலையில், 2.65 லட்சம் குவிண்டால் பருத்தியும், குஜராத்திலிருந்து, ஒரு குவிண்டால், 4,448 ரூபாய் என்ற விலையில், 6.60 லட்சம் குவிண்டால் பருத்தியும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கருத்து @வறுபாடுநாட்டின் பிற மாநிலங்களில், ஒரு குவிண்டால், 4,185 ரூபாய் என்ற விலையில், 1.26 லட்சம் குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.பருத்தி கொள்முதல் செய்வதற்கான, குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்வதில், மத்திய வேளாண் மற்றும் ஜவுளி அமைச்சகங்கள் இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில், நாடு முழுவதும், தேசிய ஜவுளி கழகத்திற்கு, சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்ததன் வாயிலாக, 2,591 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.இந்த நிதி, நிறுவனத்தின் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், தேசிய ஜவுளி கழகத்திற்கு சொந்தமான ஆலைகள் வாயிலாக, 739 கோடி ரூபாய் மதிப்புக்கு ஜவுளி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|