பதிவு செய்த நாள்
12 மே2012
00:29
புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், உருக்கு உற்பத்தி, 60 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட, 5.3 சதவீதம் (57 லட்சம் டன்) அதிகமாகும் என, உருக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இறக்குமதி:சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் உருக்கு இறக்குமதி, 5.45 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 64 சதவீதம் (3.32 லட்சம் டன்) அதிகமாகும்.மதிப்பீட்டு காலத்தில், உருக்கு ஏற்றுமதி, 2.2 சதவீதம் குறைந்து, 3.19 லட்சம் டன்னிலிருந்து, 3.12 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
வளர்ச்சி:கடந்த 2011-12ம் நிதியாண்டில், 5.5 சதவீதம் என்றளவில், மந்தமாக இருந்த உருக்கு பொருட்கள் பயன்பாடு, நடப்பு நிதியாண்டில், துவக்கத்தில் சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.
சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் உருக்கு பொருட்கள் பயன்பாடு, 7.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 56 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 52 லட்சம் டன் என்றளவில் இருந்தது.பயன்பாடு:நடப்பு 2012ம் ஆண்டில், இந்தியாவில், உருக்கு பொருட்களுக்கான தேவை, 7.25 கோடி டன்னாக இருக்கும் என, உலக உருக்கு உற்பத்தியாளர் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் உருக்கு உற்பத்தி, 7.04 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 6.6 சதவீதம் (6.60 கோடி டன்) அதிகமாகும். இதே நிதியாண்டுகளில், உருக்கு பொருட்கள் பயன்பாடு, 6.92 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.மேலும், உருக்கு பொருட்கள் ஏற்றுமதி, 20 சதவீதம் வளர்ச்சிகண்டு, 30.46 லட்சம் டன்னிலிருந்து, 41.30 லட்சம் டன்னாகவும், இதன் இறக்குமதி, 60.82 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|