பதிவு செய்த நாள்
12 மே2012
09:54
ஈரோடு: சென்றாண்டு மஞ்சள் விளைச்சல் இரட்டிப்பால், வரத்து, 30 ஆயிரத்து 847 டன்னாக அதிகரித்தது. இந்தியளவில், 75 சதவீதம் விவசாயமும், 30 சதவீதம் இதர தொழில்களும் நடக்கிறது. இதில், 36 சதவீதம் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. ஆந்திராவில், 41 சதவீதம், தமிழகத்தில், 21, கர்நாடகாவில், ஏழு, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில், 31 சதவீதம் மஞ்சள் சாகுபடியாகிறது. ஆந்திராவில் மூன்று ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால், ஈரோடு மஞ்சளுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 2009 இறுதியில் விலையும் கிடுகிடுவென உயர்ந்து, தங்கத்துக்கு நிகராக குவிண்டாலுக்கு, 18 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்தது. விலை உயர்வு காரணமாக ஒட்டுமொத்த விவசாயிகளும் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டனர். 2010 - 2011ல் ஈரோடு மாவட்டத்தில், 20 ஆயிரத்து 810 மெட்ரிக் டன் வரத்தானது. 2011-2012ல் உற்பத்தி மேலும், 10 ஆயிரத்து 37 மெட்ரிக் டன் உயர்ந்து, 30 ஆயிரத்து 847 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது.
ஈரோடு வேளாண்மை விற்பனை குழு இயக்குனர் முருகானந்தம் கூறியதாவது:
தற்போது, மஞ்சள் பயன்பாடு குறைந்து, வரத்து அதிகரிப்பால் விலையும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆனால், ஆந்திர மாநிலம் சோதாப்பூர் மஞ்சள் சந்தையிலும், மஹாராஷ்டிரா மஞ்சள் சந்தையிலும் சராசரி குவிண்டாலுக்கு, 8,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. தமிழகத்தில் மட்டும் விலை உயர்வுக்கான அறிகுறியே இல்லாமல் உள்ளது. 2010-2011ல் மஞ்சள் வரத்து, 20 ஆயிரத்து 810 மெட்ரிக் டன்னாகவும், 2011-12ல், 30 ஆயிரத்து 847 மெட்ரிக் டன்னாகவும் இருந்தது. ஒட்டுமொத்த விவசாயிகளும் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டதே இதற்கு முக்கிய காரணம். உலகளவில் மஞ்சள் தேக்கம் அடைந்ததை யொட்டி, மண்டிகளில் மஞ்சள் மூட்டைகள் ஸ்தம்பித்துள்ளன. எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு மஞ்சள் விலை உயர வாய்ப்பில்லை. 2015ல்தான், குவிண்டாலுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும் என இந்திய மார்க்கெட் கமிட்டி தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|