பதிவு செய்த நாள்
12 மே2012
11:37
கொச்சி: அமெரிக்காவில் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக சர்வதேச சந்தையில் ரப்பர் விலை உயர்ந்துள்ளது. ரப்பர் விலை கடந்த வாரத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.209 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிந்து வருவதும் ரப்பர் ஏற்றுமதியை அதிகரிக்க சாதகமான அம்சங்களாக உள்ளன. உள்நாட்டில் ரப்பர் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.194ஆக உள்ள நிலையில், சர்வதேச சந்தையில் இது ரூ.15 அதிகமாக உள்ளதால் ஏற்றுமதி அதிகரிக்கும் என அகில இந்திய ரப்பர் உற்பத்தி நிறுவனங்களின் சங்க தலைவர் வினோத் சைமன் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஜப்பான் நீங்கலாக வளர்ந்து வரும் பிற நாடுகளில் தேவை குறைந்து வருவதால், ரப்பர் விலை சர்வதேச சந்தையில் மீண்டும் சரிவடையலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. சீனாவில் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்ய தொடங்கினால் மட்டுமே விலை உயர வாய்ப்பு என வாகன டயர் தயாரிப்பாளர்கள் சங்க தலைமை இயக்குனர் ராஜீவ் புத்தராஜா தெரிவித்துள்ளர்.
கடந்த 2011-12ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ரப்பர் ஏற்றுமதி 11 சதவீதம் குறைந்து 26,531 டன்னாக சரிவடைந்துள்ளது. அவ்வாண்டின் தொடக்கத்தில் விலை உயர்ந்திருந்த நிலையில் அதிகரித்திருந்த ஏற்றுமதி பிற்பகுதியில் சரிவினை சந்தித்தது. கடந்த மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 1,945 டன்னாக மிகவும் குறைந்து போனது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் ஏற்றுமதி 7,943 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|