பானிபோனியோலி நிறுவனம்கூடுதலாக ரூ.40 கோடி முதலீடுபானிபோனியோலி நிறுவனம்கூடுதலாக ரூ.40 கோடி முதலீடு ... சென்னையில் ஏர் ஆசியா நடத்தும் டிராவல் பேர் சென்னையில் ஏர் ஆசியா நடத்தும் டிராவல் பேர் ...
நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில்...பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு உயர்வு- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2012
01:08

சென்ற ஏப்ரல் மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, முந்தைய மார்ச் மாதத்தை விட 16 சதவீதம் (92 ஆயிரத்து 937 கோடி ரூபாய்) உயர்ந்து, 6 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.44 நிறுவனங்கள் :நாட்டில், தற்போது பரஸ்பர நிதி வர்த்தகத்தில் 44 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இவை, பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்கள் வாயிலாக, 6 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான சொத்துக்களை நிர்வகித்து வருகின்றன.
"இன்கம் பண்டு' திட்டங்களில் அதிக அளவில் முதலீடு மேற்கொள்ளப்பட்டதால், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இத்திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 6.5 சதவீதம் வளர்ச்சி கண்டு 3 லட்சத்து 9 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சென்ற மார்ச்சில் "இன்கம் பண்டு' திட்டங்களில் 17 ஆயிரத்து 874 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதே மாதத்தில், இத்திட்டங்களில் இருந்து 7,654 கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது.
அதேசமயம், இதே மாதத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 1.4 சதவீதம் குறைந்து 1.56 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
"லிக்யுட் பண்ட்':சென்ற ஏப்ரலில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் "லிக்யுட்' மற்றும் "மணி மார்க்கெட்' சார்ந்த திட்டங்களில் 100 சதவீதம் முதலீடு அதிகரித்துள்ளது.
இத்திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 24 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, சென்ற மார்ச் மாதத்தில் 14 சதவீதமாக இருந்தது.
சென்ற ஏப்ரல் மாதம் மட்டும், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து 455 கோடி ரூபாய் அளவிலான முதலீடு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய மார்ச் மாதத்தில் 196 கோடி ரூபாயாக இருந்தது.பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து முதலீடுகளை திரும்பப் பெறுவது, கடந்த நான்கு மாதங்களாக அதிகரித்து வருகிறது. பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாதது தான் இதற்கு காரணம் என்று, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.முதலீட்டாளர்கள் :அதே சமயம், சென்ற பிப்ரவரியில், மிக அதிக அளவில், அதாவது 2,680 கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். இது, அதற்கு முந்தைய ஜனவரியில் 456 கோடி ரூபாயாக இருந்தது.
சென்ற ஏப்ரல் மாதம், பரஸ்பர நிதி நிறுவனங்களின் "பேலன்ஸ்டு பண்டு' பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ், 23 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. அது போன்று "கில்ட் பண்டு' பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து முதலீட்டாளர்கள், 230 கோடி ரூபாயை திரும்பப் பெற்றுள்ளனர். இதே மாதத்தில் "பண்ட்ஸ் ஆப் பண்ட்ஸ்" திட்டங்களில் இருந்து, 11 கோடி ரூபாய் வெளியேறியுள்ளதாக இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஏப்ரல் மாதத்தில், அட்சய திருதியை காரணமாக தங்க ஈ.டி.எப் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்மாதத்தில் "கோல்டு ஈ.டி.எப்' திட்டங்களில் 50 கோடி ரூபாய் அளவிற்கே முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்கம் விலை உயர்வுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது."கோல்டு ஈ.டி.எப்.,' முந்தைய மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில், "கோல்டு ஈ.டி.எப்.,' திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு முறையே, 231 கோடி ரூபாய் மற்றும் 85 கோடி ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.
ஏப்ரலில் "கோல்டு ஈ.டி.எப்.,' திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 3.4 சதவீதம் உயர்ந்து 9,886 ரூபாயாக அதிகரித்துள்ளது. இப்பிரிவு சாராத இதர ஈ.டி.எப் திட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 4 சதவீதம் குறைந்து 1,607 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)