பதிவு செய்த நாள்
13 மே2012
11:43
சிவகங்கை: "தூத்துக்குடியில், இரண்டு இடங்களில் தலா 50 மெகாவாட்- சூரிய சக்தி மின் உற்பத்தி செய்வதற்கான முன்னோடி திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது'' என, தமிழக எரிசக்தி நிறுவன துணை பொது மேலாளர் சையது அகமது தெரிவித்தார். சிவகங்கையில், விவசாயிகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்த கருத்தரங்கு நடந்தது.
துணை பொது மேலாளர் சையது அகமது பேசியதாவது: விவசாயிகள், 4.5 கிலோ வாட் மின்திறன் உள்ள மின்மோட்டார்களை, சூரிய சக்தி மூலம் இயக்கலாம். விவசாய நிலங்களில் இந்த மையம் அமைக்க, 5.2 லட்ச ரூபாய் செலவாகும். இதில், 2.8 லட்சத்தை அரசு மானியமாக தரும். எஞ்சிய தொகையினை 5 சதவீத வட்டியில் மத்திய அரசு, நபார்டு வங்கிகள் கடனாக தர முன் வருகின்றன. காலை 6 மணியில் இருந்து, மாலை 6 மணி வரை, 1.5 எச்.பி., மோட்டாரை சூரிய சக்தி மூலம் இயக்கினால், 30 ஆயிரம் லிட்டர் தண்ணீரை நிலத்தில் பாய்ச்சலாம்.
வீடுகளில், 1 கே.வி., திறனுள்ள சூரியஒளி மின்சக்தி திட்டம் அமைக்க, 2 லட்ச ரூபாய் செலவாகும். இதற்கு, 81 ஆயிரம் ரூபாய் மானியம். வீடுகளில் அமைக்க, 1,600 விண்ணப்பங்கள் வந்துள்ளன. தமிழகத்தில் முன்னோடியாக தூத்துக்குடியில், தலா 52 மெகாவாட் திறனில், இரண்டு இடங்களில் சூரிய ஒளி மின்சக்தி நிலையம் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், காற்றாலை மூலம், 40 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம் என, வெளிநாட்டு கம்பெனிகள் தெரிவிக்கின்றன. இங்கு, மின் உற்பத்தி செய்ய வெளிநாட்டினர் விரும்புகின்றனர். ஆனால், தமிழக மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இவ்வாறு சையது அகமது தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|