நூல் விலை உயர்வால் செட்டிநாடு காட்டன் சேலை உற்பத்தி பாதிப்பு நூல் விலை உயர்வால் செட்டிநாடு காட்டன் சேலை உற்பத்தி பாதிப்பு ... தமிழ்நாட்டின் ஏற்றுமதி 33.5பில்லியன் டாலர்! தமிழ்நாட்டின் ஏற்றுமதி 33.5பில்லியன் டாலர்! ...
தூத்துக்குடியில் சூரிய சக்தி மூலம் 50 மெகாவாட் மின் உற்பத்தி : மத்திய அரசு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2012
11:43

சிவகங்கை: "தூத்துக்குடியில், இரண்டு இடங்களில் தலா 50 மெகாவாட்- சூரிய சக்தி மின் உற்பத்தி செய்வதற்கான முன்னோடி திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது'' என, தமிழக எரிசக்தி நிறுவன துணை பொது மேலாளர் சையது அகமது தெரிவித்தார். சிவகங்கையில், விவசாயிகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்த கருத்தரங்கு நடந்தது.

துணை பொது மேலாளர் சையது அகமது பேசியதாவது: விவசாயிகள், 4.5 கிலோ வாட் மின்திறன் உள்ள மின்மோட்டார்களை, சூரிய சக்தி மூலம் இயக்கலாம். விவசாய நிலங்களில் இந்த மையம் அமைக்க, 5.2 லட்ச ரூபாய் செலவாகும். இதில், 2.8 லட்சத்தை அரசு மானியமாக தரும். எஞ்சிய தொகையினை 5 சதவீத வட்டியில் மத்திய அரசு, நபார்டு வங்கிகள் கடனாக தர முன் வருகின்றன. காலை 6 மணியில் இருந்து, மாலை 6 மணி வரை, 1.5 எச்.பி., மோட்டாரை சூரிய சக்தி மூலம் இயக்கினால், 30 ஆயிரம் லிட்டர் தண்ணீரை நிலத்தில் பாய்ச்சலாம்.

வீடுகளில், 1 கே.வி., திறனுள்ள சூரியஒளி மின்சக்தி திட்டம் அமைக்க, 2 லட்ச ரூபாய் செலவாகும். இதற்கு, 81 ஆயிரம் ரூபாய் மானியம். வீடுகளில் அமைக்க, 1,600 விண்ணப்பங்கள் வந்துள்ளன. தமிழகத்தில் முன்னோடியாக தூத்துக்குடியில், தலா 52 மெகாவாட் திறனில், இரண்டு இடங்களில் சூரிய ஒளி மின்சக்தி நிலையம் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், காற்றாலை மூலம், 40 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம் என, வெளிநாட்டு கம்பெனிகள் தெரிவிக்கின்றன. இங்கு, மின் உற்பத்தி செய்ய வெளிநாட்டினர் விரும்புகின்றனர். ஆனால், தமிழக மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இவ்வாறு சையது அகமது தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)