தமிழ்நாட்டின் ஏற்றுமதி 33.5பில்லியன் டாலர்!தமிழ்நாட்டின் ஏற்றுமதி 33.5பில்லியன் டாலர்! ... எஸ்ஸார் ஆயில் நிறுவனத்திற்கு ரூ.515 ‌கோடி நஷ்டம்! எஸ்ஸார் ஆயில் நிறுவனத்திற்கு ரூ.515 ‌கோடி நஷ்டம்! ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தேங்காய் வரத்து அதிகரித்த நிலையில் விலைச்சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2012
14:43

பொள்ளாச்சி:தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் தேங்காய் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர்.காங்கேயம் வெளிமார்க்கெட்டில் கடந்த மாதம் கொப்பரை கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் டன் ஒன்றுக்கு 13 ஆயிரம் ரூபாயும் விலை கிடைத்தது.

நேற்றைய நிலவரப்படி, கொப்பரை கிலோ 37.50 முதல் 38 ரூபாய்; தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்னுக்கு) 915 ரூபாய்; தேங்காய் பவுடர் கிலோவுக்கு 65 ரூபாய் விலை கிடைத்தது. விவசாயிகள் பறித்து உரித்த தேங்காய் டன்னுக்கு 10 ஆயிரத்து 200 ரூபாயும், சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பும் இளம் தேங்காய் டன்னுக்கு 10 ஆயிரம் ரூபாயும் விலை கிடைத்தது.தோப்புகளில் விவசாயிகள் பறித்து இருப்பு வைத்திருக்கும் தேங்காய் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5.50 ரூபாயும், வியாபாரிகள் பறித்துக்கொள்ளவதற்கு ஒரு தேங்காய்க்கு 4.50 ரூபாயும் விலை கொடுக்கப்பட்டது.

வரத்து அதிகரித்து வரும் நேரத்தில், தேங்காய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் சரிந்து வருவதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.கொப்பரை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:இந்தாண்டு தேங்காய் சீசன் துவங்குவதற்கு முன்பே, மார்க்கெட் சரிந்து விட்டது. தேங்காய் டன்னுக்கு மூவாயிரம் ரூபாய் சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு தேங்காய் விலை உயர வாய்ப்புள்ளதால், இருப்பு வைத்து விற்க, விவசாயிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அரசு ஆதரவு விலையில் கொப்பரை கொள்முதலை செய்வதை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதால், வெளிமார்க்கெட்டில் விலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கொப்பரை உற்பத்தி அதிகம் உள்ளதால், கலெக்டர்கள் இப்பிரச்னையில் கவனம் செலுத்தி, ஆதரவு விலை கொள்முதலை தடையின்றி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)