பதிவு செய்த நாள்
13 மே2012
14:43
பொள்ளாச்சி:தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் தேங்காய் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர்.காங்கேயம் வெளிமார்க்கெட்டில் கடந்த மாதம் கொப்பரை கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் டன் ஒன்றுக்கு 13 ஆயிரம் ரூபாயும் விலை கிடைத்தது.
நேற்றைய நிலவரப்படி, கொப்பரை கிலோ 37.50 முதல் 38 ரூபாய்; தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்னுக்கு) 915 ரூபாய்; தேங்காய் பவுடர் கிலோவுக்கு 65 ரூபாய் விலை கிடைத்தது. விவசாயிகள் பறித்து உரித்த தேங்காய் டன்னுக்கு 10 ஆயிரத்து 200 ரூபாயும், சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பும் இளம் தேங்காய் டன்னுக்கு 10 ஆயிரம் ரூபாயும் விலை கிடைத்தது.தோப்புகளில் விவசாயிகள் பறித்து இருப்பு வைத்திருக்கும் தேங்காய் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5.50 ரூபாயும், வியாபாரிகள் பறித்துக்கொள்ளவதற்கு ஒரு தேங்காய்க்கு 4.50 ரூபாயும் விலை கொடுக்கப்பட்டது.
வரத்து அதிகரித்து வரும் நேரத்தில், தேங்காய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் சரிந்து வருவதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.கொப்பரை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:இந்தாண்டு தேங்காய் சீசன் துவங்குவதற்கு முன்பே, மார்க்கெட் சரிந்து விட்டது. தேங்காய் டன்னுக்கு மூவாயிரம் ரூபாய் சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு தேங்காய் விலை உயர வாய்ப்புள்ளதால், இருப்பு வைத்து விற்க, விவசாயிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அரசு ஆதரவு விலையில் கொப்பரை கொள்முதலை செய்வதை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதால், வெளிமார்க்கெட்டில் விலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கொப்பரை உற்பத்தி அதிகம் உள்ளதால், கலெக்டர்கள் இப்பிரச்னையில் கவனம் செலுத்தி, ஆதரவு விலை கொள்முதலை தடையின்றி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|