பதிவு செய்த நாள்
13 மே2012
15:48
விற்பனை வரி சலுகைகள் மற்றும் நிறுவன கடன் மறுசீரமைப்பு தொடர்பான மாற்றங்கள் உள்ளிட்ட சில காரணங்களால் எஸ்ஸார் ஆயில் நிறுவனத்திற்கு ரூ.515 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. எஸ்ஸார் ஆயில் நிறுவனம் தனது நிதிநிலையை அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது. அதில் மார்ச் மாதம் முடிய அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 19சதவீதம் உயர்ந்து ரூ. 19,160 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.14,846 கோடியாக இருந்து இருக்கிறது. நிறுவனத்தின் வருவாய் கூடியிருந்தும் அந்த நிறுவனத்திற்கு ரூ.515 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்நிறுவனம் ரூ.321 கோடி லாபம் ஈட்டியிருந்தது. மேலும் 2011-12ம் ஆண்டுக்கான ஓராண்டு நிதிநிலை அறிக்கையில் அந்நிறுவனத்திற்கு ரூ.4,199 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் ரூ.654 கோடியாக லாபமாக ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|