பதிவு செய்த நாள்
14 மே2012
00:20
மும்பை:சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்திய மின்சார சாதனங்கள் தயாரிப்பு துறையின் வளர்ச்சி, 6.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது என, மின் மற்றும் மின்னணு சாதன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.மின்சார சாதனங்கள் தயாரிப்பு துறை, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 13.7 சதவீதம் என்றளவிலும், 2009-10 நிதியாண்டில், 11.3 சதவீதம் என்றளவிலும் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டிருந்தது. எனினும், மின்சாரத் துறையில் ஏற்பட்ட சுணக்க நிலை, அதிகளவிலான மின் உபகரணங்கள் இறக்குமதி போன்றவற்றால், சென்ற நிதியாண்டில், இத்துறையின் வளர்ச்சி 6.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது.வட்டி விகித உயர்வால், நிறுவனங்களின் விரிவாக்க திட்டங்களில் மந்தநிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக, சென்ற நிதியாண்டில், கெப்பாசிட்டர், ஸ்விட்ச் கியர் மற்றும் மின் பகிர்மான சாதனங்கள் விற்பனையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கேபிள் ஒயர்கள் பிரிவின் விற்பனை 25.7 சதவீதம் என்றளவில் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது.இதுதவிர, சீன நாட்டின் மின் சாதனங்கள் இறக்குமதியால், உள்நாட்டில் இத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், கடந்த ஐந்து ஆண்டுகளாக, மின்சார சாதனங்கள் இறக்குமதி, 28.28 சதவீதம் என்றளவில் உயர்ந்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|