பதிவு செய்த நாள்
14 மே2012
00:22
சென்னை:சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், மொத்த வருவாயாக 20 ஆயிரத்து 545 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 24.62 சதவீதம் (16 ஆயிரத்து 486 கோடி ரூபாய்) அதிகம்.இதே காலத்தில், இவ்வங்கியின் நிகர லாபம், 1,252 கோடியிலிருந்து, 533 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இவ்வங்கியின் வட்டி வருவாய், 25.81 சதவீதம் வளர்ச்சி கண்டு, 15 ஆயிரத்து 221 கோடியிலிருந்து, 19 ஆயிரத்து 150 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சென்ற முழு நிதியாண்டில், இவ்வங்கி திரட்டிய மொத்த டெபாசிட், 9.38 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 79 ஆயிரத்து 356 கோடியிலிருந்து, 1 லட்சத்து 96 ஆயிரத்து 173 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், இவ்வங்கி வழங்கிய மொத்த கடன்கள், 14.70 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 31 ஆயிரத்து 407 கோடியிலிருந்து, 1 லட்சத்து 50 ஆயிரத்து 725 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதையடுத்து, இவ்வங்கியின் மொத்த வர்த்தகம் 11.63 சதவீதம் அதிகரித்து, 3 லட்சத்து 46 ஆயிரத்து 898 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|