பதிவு செய்த நாள்
14 மே2012
00:40
திருவனந்தபுரம்:மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தால் (எம்.என். ஆர்.இ.ஜி.ஏ.,), கடல் உணவு பொருள் துறையில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவேதிட்டத்தில், கடல் உணவு தொழிலையும் சேர்க்க வேண்டும் என, கேரள கடல் உணவு தொழிலக கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
உலகளவில் மீன் உற்பத்தியில், சீனாவிற்கு அடுத்த இடத்தில், இந்தியா
(6 சதவீதம்) உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 7 சதவீத வளர்ச்சியை கண்டு வரும் இந்திய கடல் உணவு மற்றும் மீன் துறையின் சந்தை மதிப்பு தற்போது 53 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
இது, வரும் 2015 ம் ஆண்டில் 67 ஆயிரத்து 800 கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், மத்திய அரசின் எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ., திட்டத்தால், கடல் உணவு பொருட்கள் துறை, ஆள் பற்றாக்குறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கேரளாவின் கடலோரப் பகுதிகளில் இறால், கணவாய் உள்ளிட்ட மீன் வகைகளை தோலுரித்து, பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு பணி செய்ய ஆட்கள் கிடைக்காத நிலை உள்ளது.இத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள், எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ. திட்டத்தின் கீழ் சுலபமாக சம்பாதிக்க சென்று விட்டனர். இதனால், இப்பணிகளை மேற்கொண்டிருந்த பல தொழில் கூடங்கள் மூடப்பட்டு விட்டன.
கேரளாவில்,இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ. அறிமுகமானதில் இருந்து, இந்த தொழில் கூடங்கள் ஆள்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால், கடல் உணவு பொருட்களை தோலுரித்து கொடுக்கும் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. எனவேழிலை, எம்.என். ஆர்.இ.ஜி.ஏ., திட்டத்தில் சேர்க்க வேண்டும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர். அவ்வாறு சேர்க்கப்பட்டால், இத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் ஊதியத்துடன் கூடுதல் தொகையை அளிக்க தயாராக இருப்பதாகவும், இத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|