பொதுத்துறை வங்கிகள் 60,000 ஏ.டி.எம்.,கள் திறக்க திட்டம்பொதுத்துறை வங்கிகள் 60,000 ஏ.டி.எம்.,கள் திறக்க திட்டம் ... ஏர்இந்தியா ஸ்டிரைக்:ரூ.96 கோடி இழப்பு ஏர்இந்தியா ஸ்டிரைக்:ரூ.96 கோடி இழப்பு ...
நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில்...முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 4.64 கோடி டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2012
00:48

புதுடில்லி:நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில், நாட்டின் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 4.64 கோடி டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் கையாளப்பட்ட சரக்கை விட, 6.33 சதவீதம் (4.95 கோடி டன்) குறைவு என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தற்காலி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மந்த நிலை:இந்தியாவில், சென்னை, மும்பை, பரதீப், கோல்கட்டா உள்ளிட்ட, 12 பெரிய துறைமுகங்களும், 187 சிறிய, துறைமுகங்களும் உள்ளன. சர்வதேச பொருளாதார நெருக்கடியால், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, ஒட்டு மொத்த அளவில், இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்குகளின் அளவு குறைந்துள்ளது. எண்ணூர், புதிய மங்களூர் மற்றும் மும்பை துறைமுகங்கள் அதிக அளவில் சரக்கை கையாண்டுள்ளன. அதேசமயம், கோல்கட்டா, சென்னை, பரதீப் உள்ளிட்ட இதர துறைமுகங்கள் குறைந்த அளவில் சரக்கை கையாண்டுள்ளன.
சென்ற ஏப்ரல் மாதத்தில், எண்ணூர் துறைமுகம் கையாண்ட சரக்கு, 13 லட்சத்து 71 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், கையாண்டதை விட, 28.25 சதவீதம் (10 லட்சத்து 69 ஆயிரம் டன்) அதிகமாகும்.
தூத்துக்குடி துறைமுகம்:மதிப்பீட்டு காலத்தில், தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம், கையாண்ட சரக்கின் அளவு, 3.49 சதவீதம் வளர்ச்சியடைந்து, 23 லட்சத்து 48 ஆயிரம் டன்னிலிருந்து, 24 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 20.28 சதவீதம் குறைந்து, 53 லட்சத்து 90 ஆயிரம் டன்னிலிருந்து, 42 லட்சத்து 97 ஆயிரம் டன்னாக சரிவடைந்துள்ளது. கோல்கட்டாவில், உள்ள இரண்டு துறைமுகங்கள், கையாண்ட சரக்கின் அளவு, 22.56 சதவீதம் சரிவடைந்து, 40 லட்சம் டன்னிலிருந்து, 31 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
இதில், கோல்கட்டா டாக் சிஸ்டம், கையாண்ட சரக்கு, 15.84 சதவீதம் குறைந்து, 10 லட்சத்து 67 ஆயிரம் டன்னிலிருந்து, 8 லட்சத்து 98 ஆயிரம் டன்னாகவும், ஹால்டியா டாக் காம்பளக்ஸ் துறைமுகம் கையாண்ட சரக்கு, 25 சதவீதம் சரிவடைந்து, 29 லட்சத்து 36 ஆயிரம் டன்னிலிருந்து, 22 லட்சம் டன்னாகவும் குறைந்துள்ளது. பரதீப் துறைமுகம், கையாண்ட சரக்கு, 22.53 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 52 லட்சத்து 60 ஆயிரம் டன்னிலிருந்து, 40 லட்சத்து 75 ஆயிரம் டன்னாகவும், விசாகப்பட்டினம் துறைமுகம், கையாண்ட சரக்கு, 10.94 சதவீதம் சரிவடைந்து, 55 லட்சத்து 67 ஆயிரம் டன்னிலிருந்து, 49 லட்சத்து 58 ஆயிரம் டன்னாகவும் குறைந்துள்ளது. மங்களூர் துறைமுகம்:கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கு, 0.21 சதவீதம் குறைந்து, 14 லட்சத்து 9 ஆயிரம் டன்னிலிருந்து, 14 லட்சத்து 6 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. அதேசமயம், புதிய மங்களூர் துறைமுகம், கையாண்ட சரக்கு, 19.10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 24 லட்சத்து 61 ஆயிரம் டன்னிலிருந்து, 29 லட்சத்து 31 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது. மர்மகோவா துறைமுகம், கையாண்ட சரக்கு, 18.68 சதவீதம் குறைந்து, 49 லட்சம் டன்னிலிருந்து, 39 லட்சத்து 86 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. மும்பை துறைமுகம், கையாண்ட சரக்கு, 16.41 சதவீதம் வளர்ச்சிகண்டு, 47 லட்சத்து 53 ஆயிரம் டன்னிலிருந்து, 55 லட்சத்து 33 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் துறைமுகம், கையாண்ட சரக்கு, 0.59 சதவீதம் குறைந்து, 56 லட்சம் டன்னிலிருந்து, 55 லட்சத்து 75 ஆயிரம் டன்னாகவும், கண்ட்லா துறைமுகம், கையாண்ட சரக்கு, 0.41 சதவீதம் சரிவடைந்து, 67 லட்சத்து 88 ஆயிரம் டன்னிலிருந்து, 67 லட்சத்து 60 ஆயிரம் டன்னாகவும் குறைந்துள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம், மேற்கண்ட துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விரிவாக்கம்:இதன்படி, துறைமுகங்களை ஆழப்படுத்துதல், கப்பல் நிறுத்தும் தளங்களை விரிவுபடுத்துதல், இணைப்பு சாலை, ரயில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சரக்குகளை அதிகள அளவில் கையாளும் வகையில், அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் சிறப்பாக நிறைவு பெறும் போது, இந்திய துறைமுகங்கள் கையாளும் சரக்குகளின் அளவு, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)