நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில்...முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 4.64 கோடி டன்நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில்...முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 4.64 ... ... ஏர்இந்தியா ஸ்டிரைக்:ரூ.96 கோடி இழப்பு ஏர்இந்தியா ஸ்டிரைக்:ரூ.96 கோடி இழப்பு ...
ஐ.டி நிறுவனங்களில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2012
09:27

மதுரை: இந்தியாவில் உள்ள முன்னணி ஐ.டி., நிறுவனங்களில் இந்தாண்டு 2 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்திய சாப்ட்வேர் மற்றும் பி.பி.ஓ.,க்கள் கூட்டமைப்பின் (நாஸ்காம்) மனிதவள மேம்பாட்டிற்கான கவுன்சில் கூட்டம் கடந்த வாரம் டில்லியில் நடந்தது. முன்னணி ஐ.டி.நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறித்து இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
கடந்தாண்டு நாடு முழுதும் உள்ள முன்னணி ஐ.டி., நிறுவனங்களில் 2 லட்சம் பேருக்கு வேலை அளிக்கப்பட்டது. இந்தாண்டும் 2 லட்சம் பேரை வேலைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டது. 2009-10 ம் ஆண்டில் இன்ஜினியரிங் மாணவர்கள் 8 வது செமஸ்டர் படிக்கும்போது வளாகத்தேர்வு (கேம்பஸ் இண்டர்வியூ) மூலம் பல்வேறு ஐ.டி.நிறுவனங்களில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 2010-11ல், 7 வது செமஸ்டர் துவக்கத்திலேயே, அதாவது ஜூன், ஜூலை மாதங்களில் கேம்பஸ் இண்டர்வியூக்கள் நடத்தப்பட்டன.
செமஸ்டர் தேர்வு முடிந்த உடனேயே, வேலைக்காக பல்வேறு நிறுவனங்கள் நடத்தும் தேர்வுக்காகவும் தங்களை தயார் செய்ய மாணவர்கள் சிரமப்பட்டனர். எனவே இந்தாண்டு வளாகத் தேர்வுகளை செப்டம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாஸ்காம் தென்மண்டல இயக்குனர் புருஷோத்தமன் கூறுகையில்: ஐ.டி., துறையில் மனித ஆற்றல்தான் முக்கியம். தொண்ணூறு சதவீத நிறுவனங்கள் ஏப்ரல், மே மாதத்தில் சம்பள உயர்வை அறிவிக்கும். அமெரிக்க நிறுவனங்கள் மட்டும் ஜனவரியில் சம்பள உயர்வை அறிவிக்கும்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை இருந்தாலும், இந்திய ஐ.டி.நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கும் சம்பள உயர்வை இந்தாண்டு குறைக்கவில்லை. இந்திய ஐ.டி., நிறுவனங்களுக்கு 60 சதவீத வர்த்தகம் அமெரிக்காவில் இருந்து வருவது வழக்கம். இந்தாண்டும் அதேநிலை தொடர்கிறது.
ஆனால் தகவல் தொழில்நுட்பத்திற்கான திட்டச் செலவுகளை வெளிநாட்டு நிறுவனங்கள் குறைக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி, இந்திய ஐ.டி., நிறுவனங்கள் அதனை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது, என்றார்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)