ஏர்இந்தியா ஸ்டிரைக்:ரூ.96 கோடி இழப்புஏர்இந்தியா ஸ்டிரைக்:ரூ.96 கோடி இழப்பு ... தங்கம் விலை சற்று குறைந்தது தங்கம் விலை சற்று குறைந்தது ...
அரசு விரைவு போக்குவரத்து கழகம் : ஒரே நாளில் ரூ.1.63 கோடி வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2012
11:41

சென்னை:கோடை விடுமுறையால், தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மே 6ம் தேதி, வசூலில் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதே நேரம், மே 27 முதல் ஜூன் 6 வரையிலான நாட்களில், தென் மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் முன்பதிவு முடிவுக்கு வந்துள்ளது.தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின், 23 டெப்போக்கள் சார்பில், தினசரி, 865 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோடை விடுமுறையால், வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும், கூட்டம் நிரம்பி வழிகிறது.
சென்னை, சேலம், ஈரோடு, திருச்சி, கோவையில் இருந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகியவற்றுக்கு இயக்கப்படும் பஸ்களில், கூட்டம் அதிகரித்துள்ளது.
வழக்கமாக, விரைவு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்றின், ஒரு நாள் வருவாய், 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது, தற்போது, 17 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் இயக்கப்படும் பஸ்களின் தினசரி வருவாய், 1.30 கோடியாக இருந்து வந்தது. இது, கடந்த வாரத்தில், 1.50 கோடியாக உயர்ந்தது.இந்நிலையில், மே 6ம் தேதி, தமிழகம் முழுவதும் விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களின் முன்பதிவு முடிவுக்கு வந்துவிட்டதால், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு மொத்தம், 931 பஸ்கள் இயக்கப்பட்டதில், வருவாயாக, ஒரு கோடியே 63 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.இதன் மூலம், நடப்பாண்டில் அதிக வருவாய் சாதனையாக கருதப்பட்ட, ஏப்ரல் 8ம் தேதி வசூலான, ஒரு கோடியே 52 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் முறியடிக்கப்பட்டுள்ளது. இது, விரைவுப் போக்குவரத்துக் கழக வரலாற்றில் அதிகபட்ச வசூல் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து, கிளை மேலாளர் ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், கோடை விடுமுறை காரணமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில், எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகரித்துள்ளது. அனைத்து பஸ்களிலும், முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், தேவைப்படும் இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால், வசூலில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)