பதிவு செய்த நாள்
17 மே2012
10:52
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 151.56 புள்ளிகள் அதிகரித்து 16181.69 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 50.75 புள்ளிகள் அதிகரித்து 4909.00 புள்ளிகளோடு காணப் பட்டது.இது பங்கு முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சிமை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "சென்செக்ஸ்' சென்ற ஜனவரி மாதம் 9ம் தேதிக்கு பிறகு, நேற்றைய வர்த்தகத்திற்கு இடையே மீண்டும் 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சென்றது.கிரீஸ் நாட்டு பிரச்னையால், இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் நேற்று பங்கு வியாபாரம் மிகவும் சரிவடைந்திருந்தது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உலக நிலவரங்கள் மிகவும் மோசமாகவே உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக ராஜ்யசபாவில் தெரிவித்தார். இதையடுத்து, பங்கு வர்த்தகம் கடும் சரிவிலிருந்து ஓரளவிற்கு மீண்டது
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|