பதிவு செய்த நாள்
17 மே2012
23:57
மும்பை: பருத்தி, ஆமணக்கு ஆகியவற்றின் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், இப்பயிர்களுக்கு பதிலாக, விலை அதிகரித்து வரும் சோயா, நிலக்கடலை ஆகியவற்றை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். கடலைஇதனால், நடப்பு 2012-13ம் நிதியாண்டில் சோயா மற்றும் கடலை பயிரிடும் பரப்பளவு, முறையே 7 சதவீதம் மற்றும் 10 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில் ஆண்டு துவக்கத்தில், பருத்தி, ஆமணக்கு ஆகியவற்றின் விலை உயர்ந்திருந்தது. இதனால் சோயா 1.03 கோடி ஹெக்டேரிலும், நிலக்கடலை, 43 லட்சம் ஹெக்டேர் என்ற அளவிலும் குறைவான பரப்பில் பயிரிடப்பட்டது. ஆனால், நடப்பாண்டில், இந்த இரு விளைபொருட்களின் விலை வீழ்ச்சி கண்டது. முன்பேர சந்தைகளில் பருத்தி கடும் சரிவை சந்தித்தது. அது போன்று ஆமணக்கு விலை 35 சதவீதம் வீழ்ச்சி கண்டது.அதே சமயம், நடப்பாண்டில் சோயா, நிலக்கடலை ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. முன்பேர சந்தையில், 100 கிலோ சோயா 3,785 ரூபாயாக அதிகரித்தது. அது போன்று, நிலக்கடலை விலை 6,500 ரூபாயாக உயர்ந்தது.இந்த விலை உயர்வு தந்த உற்சாகத்தால், விவசாயிகள் கூடுதல் நிலப்பரப்பில் சோயா, நிலக்கடலை ஆகிய வற்றை பயிரிட்டுள்ளனர். இதனால், கடந்த நிதியாண்டை விட, சோயா பயிரிடும் பரப்பளவு 7 சதவீதமும், நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு 10 சதவீதமும் உயர வாய்ப்புள்ளதாக இத்துறை சார்ந்த ஒருவர் தெரிவித்தார்.பொதுவாக, பருவமழைக்கு பிறகு, ஜூன் மாதம் விவசாயிகள் சோயா மற்றும் நிலக்கடலை பயிரிடுவர்.சோயா, ஆண்டுக்கு ஒரு முறையும், நிலக்கடலை ஆண்டுக்கு இருமுறையும் பயிரிடப்படும். ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், பருத்தி விவசாயம் செய்து வந்த விவசாயிகள் தற்போது, சோயா விவசாயத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.சமையல் எண்ணெய்சர்வதேச சந்தையில், தென் அமெரிக்காவின் சோயா பங்களிப்பு குறைந்துள்ளது. இது, இந்திய சோயா புண்ணாக்கு ஏற்றுமதியாளர்களுக்கு சிறந்த வர்த்தக வாய்ப்பை வழங்கியுள்ளது.உலகளவில், இந்தியா, அதிக அளவில் சமையல் எண்ணெய் இறக்குமதியை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் இருந்து பெருமளவு பாமாயில் இறக்குமதி செய்து கொள்ளப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|