உற்பத்தி துறையில் 40 லட்சம் வேலைவாய்ப்பு உற்பத்தி துறையில் 40 லட்சம் வேலைவாய்ப்பு ... வீட்டு வசதி கடன் மிதமான வளர்ச்சி வீட்டு வசதி கடன் மிதமான வளர்ச்சி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
விலை உயர்வால் சோயா பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2012
23:57

மும்பை: பருத்தி, ஆமணக்கு ஆகியவற்றின் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், இப்பயிர்களுக்கு பதிலாக, விலை அதிகரித்து வரும் சோயா, நிலக்கடலை ஆகியவற்றை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். கடலைஇதனால், நடப்பு 2012-13ம் நிதியாண்டில் சோயா மற்றும் கடலை பயிரிடும் பரப்பளவு, முறையே 7 சதவீதம் மற்றும் 10 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில் ஆண்டு துவக்கத்தில், பருத்தி, ஆமணக்கு ஆகியவற்றின் விலை உயர்ந்திருந்தது. இதனால் சோயா 1.03 கோடி ஹெக்டேரிலும், நிலக்கடலை, 43 லட்சம் ஹெக்டேர் என்ற அளவிலும் குறைவான பரப்பில் பயிரிடப்பட்டது. ஆனால், நடப்பாண்டில், இந்த இரு விளைபொருட்களின் விலை வீழ்ச்சி கண்டது. முன்பேர சந்தைகளில் பருத்தி கடும் சரிவை சந்தித்தது. அது போன்று ஆமணக்கு விலை 35 சதவீதம் வீழ்ச்சி கண்டது.அதே சமயம், நடப்பாண்டில் சோயா, நிலக்கடலை ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. முன்பேர சந்தையில், 100 கிலோ சோயா 3,785 ரூபாயாக அதிகரித்தது. அது போன்று, நிலக்கடலை விலை 6,500 ரூபாயாக உயர்ந்தது.இந்த விலை உயர்வு தந்த உற்சாகத்தால், விவசாயிகள் கூடுதல் நிலப்பரப்பில் சோயா, நிலக்கடலை ஆகிய வற்றை பயிரிட்டுள்ளனர். இதனால், கடந்த நிதியாண்டை விட, சோயா பயிரிடும் பரப்பளவு 7 சதவீதமும், நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு 10 சதவீதமும் உயர வாய்ப்புள்ளதாக இத்துறை சார்ந்த ஒருவர் தெரிவித்தார்.பொதுவாக, பருவமழைக்கு பிறகு, ஜூன் மாதம் விவசாயிகள் சோயா மற்றும் நிலக்கடலை பயிரிடுவர்.சோயா, ஆண்டுக்கு ஒரு முறையும், நிலக்கடலை ஆண்டுக்கு இருமுறையும் பயிரிடப்படும். ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், பருத்தி விவசாயம் செய்து வந்த விவசாயிகள் தற்போது, சோயா விவசாயத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.சமையல் எண்ணெய்சர்வதேச சந்தையில், தென் அமெரிக்காவின் சோயா பங்களிப்பு குறைந்துள்ளது. இது, இந்திய சோயா புண்ணாக்கு ஏற்றுமதியாளர்களுக்கு சிறந்த வர்த்தக வாய்ப்பை வழங்கியுள்ளது.உலகளவில், இந்தியா, அதிக அளவில் சமையல் எண்ணெய் இறக்குமதியை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் இருந்து பெருமளவு பாமாயில் இறக்குமதி செய்து கொள்ளப்படுகிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)