பதிவு செய்த நாள்
17 மே2012
23:58
மும்பை: சென்ற 2011-12ம் நிதியாண்டில், வீட்டு வசதி நிறுவனங்களின் கடன் மிதமான அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக, தேசிய வீட்டு வசதி வங்கி (என்.எச்.பீ.,) தெரிவித்துள்ளது.வட்டி அதிகரிப்பு, பணப்புழக்கம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களால், இந்நிறுவனங்களின் கடன் வளர்ச்சி மிதமாக இருந்தது.சென்ற நிதியாண்டில், 54 வீட்டு வசதி நிறுவனங்களின் கடன் வளர்ச்சி, 18 சதவீதம் உயர்ந்து, 2 லட்சத்து 20 ஆயிரத்து 396 கோடி ரூபாயாக உள்ளது. இது, முந்தைய 2010-11 நிதியாண்டில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 438 கோடி ரூபாயாக இருந்தது.பொதுத்துறையை சேர்ந்த 26 வங்கிகள் வழங்கிய, வீட்டு வசதி கடன், கடந்த 2011-12ம் நிதியாண்டில், டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், 18 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வங்கிகளின் வீட்டு வசதி கடன் வளர்ச்சி, முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 2 லட்சத்து 39 ஆயிரத்து 79 கோடி ரூபாயாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டை விட, 18 சதவீதம் (2 லட்சத்து 2 ஆயிரத்து 356 கோடி ரூபாய்) அதிகமாகும்.இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், முதல் முறையாக வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே சமயம், நகரங்களில் வீடுகளின் விலை உயர்வால், வீட்டு வசதி கடன் பெறுவது மந்தமடைந்துள்ளதாக என்.எச்.பீ., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|