சுகுணா குழுமம்: கோழிப்பண்ணை மேலாண்மை கல்லூரி சுகுணா குழுமம்: கோழிப்பண்ணை மேலாண்மை கல்லூரி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால்... புதிய பங்கு வெளியீடுகள் ஒத்தி வைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2012
00:00

மும்பை: இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால், இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்வதற்காக, மூலதனச் சந்தையில் களமிறங்கி பங்கு வெளியீட்டை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளன.வெளியீட்டு காலம் நடப்பு 2012ம் ஆண்டில், இதுவரை பங்கு வெளியீட்டை மேற்கொள்வதற்காக, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி'யிடம் அனுமதி பெற்ற பல நிறுவனங்களுள், 17 நிறுவனங்களின் வெளியீட்டு காலம் முடிவடைந்து விட்டது. ஆனால், இந்நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை ஒத்தி போட்டும், விலக்கி கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேற்கண்ட 17 நிறுவனங்களும், பங்கு வெளியீட்டின் வாயிலாக, 5,928 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு காலண்டர் ஆண்டில், பங்கு வெளியீட்டை மேற்கொண்டு, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நான்கு நிறுவனங்களுள், மூன்று நிறுவனப் பங்குகளின் சந்தை விலை, அவற்றின் வெளியீட்டு விலையை விட மிகவும் குறைந்துள்ளது. மேலும், மூன்று நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை விலக்கி கொண்டுள்ளதாக எஸ்.எம்.சி. குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.வெளியீட்டு விலைகடந்த 2009ம் ஆண்டு முதல், இதுவரையிலுமாக, 133 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொண்டுள்ளன. இதில், 24 நிறுவனப் பங்குகள் மட்டுமே வெளியீட்டு விலையை விட அதிகமாக உள்ளது.கடந்த 2011ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல், இதுவரையிலுமாக, பங்கு வெளியீடு மேற்கொள்வதற்காக "செபி' அமைப்பிடம் அனுமதி பெற்ற 50 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை ஒத்திப்போட் டுள்ளன. இவை பங்கு வெளியீட்டை மேற்கொண்டிருந்தால், 40 ஆயிரத்து 326 கோடி ரூபாய் திரட்டப்பட்டிருக்கும்.மத்திய அரசு, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.மத்திய அரசுஅனுமதிஆனால், பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், இந்நிறுவனங்களாலும் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. செயில், இந்துஸ்தான் காப்பர், ராஷ்டிரிய இஸ்பத் நிகாம், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள மத்திய அரசு, அனுமதி அளித்துள்ளது.பொதுத் துறையில், கோல் இந்தியா, பவர் கிரிட், ஆகிய இரண்டு நிறுவனப் பங்குகளின் விலை மட்டுமே, வெளியீட்டு விலையை விட கூடுதலாக உள்ளது. அதேசமயம், நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் (என்.பீ.சி.சி.,), மங்கனீஸ் ஓர் இந்தியா (எம்.ஓ.ஐ.எல்.) நிறுவனம், பி.டி.சி. பைனான்ஷியல் சர்வீசஸ் மற்றும் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை, வெளியீட்டு விலையை விட குறைவாக உள்ளது.அதிக விலைமத்திய அரசு, நன்கு செயல்படும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கிற்கு, அதிக விலை கிடைக்க வேண்டுமென விரும்புகிறது. ஆனால், தற்போதைய சந்தை நிலவரம், மத்திய அரசின் எண்ணத்திற்கு தடை கல்லாக உள்ளது. மேலும், பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், புதிய பங்கு வெளியீடுகளுக்கு, முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் இல்லாமல் உள்ளது.நாட்டின் பணவீக்கம் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதம், அடுத்த ஓரிரு மாதங்களில் குறையக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இது, பொதுத் துறை நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் அதிக இடர்பாடு அளிப்பதாக உள்ளது.ஐரோப்பிய நாடுகளில், நிலவும் குழப்ப நிலை, ரூபாயின் வெளிமதிப்பு சரிவு, மத்திய அரசின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவது போன்றவையே, தற்போதைய பங்கு சந்தை பின்னடைவிற்கு காரணம் என, கூறப்படுகிறது.கடன்களுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகமாக உள்ளதாலும், பங்கு வெளியீட்டை மேற்கொண்டு நிதி ஆதாரத்தை திரட்ட முடியாததாலும், பல நிறுவனங்கள் அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளன. வேலை வாய்ப்புமேலும், உள்நாட்டில் அதிகளவு வேலை வாய்ப்பு உருவாவதும், இது போன்ற காரணங்களால் தடைபட்டு போயுள்ளது என, மும்பையை சேர்ந்த ஆய்வு நிறுவனத்தின் உயரதிகாரி தெரிவித்தார்.இந்நிலையில், சென்ற புதனன்று பங்கு வெளியீட்டை மேற்கொண்ட, ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு எதிர்பார்த்த அளவிற்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வரவில்லை. இந்நிறுவனம், பங்கின் வெளியீட்டு விலையை, 146-155 ரூபாய் என்றளவில் நிர்ணயித்துள்ளது. இவ்வெளியீடு வாயிலாக, இந்நிறுவனம் 182 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)