பதிவு செய்த நாள்
19 மே2012
00:01
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்றும் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. தொடக்கத்தில், "சென்செக்ஸ்' 250 புள்ளிகளுக்கு குறைவாகவும், "நிப்டி' 4,800 புள்ளிகளுக்கும் கீழும் சென்றது. இந்நிலையில், மதியத்திற்கு பிறகு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதையடுத்து, மதியத்திற்கு பிறகு பங்கு வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது.இந்நிலையில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த, 16 வங்கிகளின் கடன் தகுதி மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் குறைத்தது. இது தவிர்த்து, சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர் பொருட்கள், வங்கி, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 82.27 புள்ளிகள் அதிகரித்து, 16,152.75 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,206.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,809.71 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 21.25 புள்ளிகள் உயர்ந்து, 4,891.45 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,908.50 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக 4,788.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|