பதிவு செய்த நாள்
19 மே2012
12:56
புதுடில்லி: கடந்த 2011-12ம் நிதி ஆண்டில் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் உள்நாட்டு செயல்பாடுகள் மூலம் ரூ.91800 கோடி வருவாய் ஈட்டியுள்ளன. இது, முந்தைய ஆண்டில் ரூ.78,600 கோடியாக இருந்தது. இதன் மூலம் வருவாய் 16.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.சென்ற நிதி ஆண்டில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்றுமதி வாயிலாக 10,000 கோடி டாலர் (ரூ.5 லட்சம் கோடி) வருவாய் ஈட்டியுள்ளன. இது, முந்தைய நிதி ஆண்டில் 8800 கோடி டாலராக இருந்தது. 2007-08 முதல் 2011-12 வரையிலான ஐந்து நிதி ஆண்டுகளில் ஐ.டி. துறையின் வருவாய் சராசரியாக 17 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2008ம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஐ.டி. துறையின் பங்களிப்பு 6.4 சதவீதமாக இருந்தது. இது, 2012ம் ஆண்டில் 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இத்துறை 28 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 89 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|