பதிவு செய்த நாள்
20 மே2012
00:14
சென்னை:"டைரக்ட் டூ ஹோம்' எனப்படும் டீ.டி.எச். சேவையில் டாட்டா ஸ்கை நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அதன் டீ.டி.எச். விற்பனையை உயர்த்த திட்டமிட்டுள்ளது.வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து கேபிள் டி.வி. இணைப்புகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கேபிள் மற்றும் சேட்டிலைட் இணைப்பு கொண்ட, 12.60 கோடி இணைப்புகள் இத்தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட உள்ளன. இதை சாதகமாக பயன்படுத்தி, குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை வழங்கும் வகையில், இந்நிறுவனம், டீ.டி.எச். விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனம், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையத்தை கொண்டுள்ளது. மேலும், டிஜிட்டல் முறையில் வீடியோவை பதிவு செய்யும் வசதியையும் வழங்குகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|